மெட்ரோ ரயில்சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர்வரையிலான புதிய மெட்ரோ ரயில்சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கிவைத்தார்.

ரூ.3,370 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (பிப்.14) தொடக்கிவைத்தார்.

9.06 கிலோ மீட்டர் மெட்ரோ வழித்தடம் வடசென்னையை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துடன் இணைக்கும்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதியமெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.

கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதை:

இதேபோன்று சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார்.

துறைமுக போக்கு வரத்து நெரிசலை குறைக்க ரூ.293.40 கோடி செலவில் 22.1 கிலோ மீட்டர் தூரம் ரயில்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில்பாதை சென்னை, எண்ணூர், துறைமுகங்களை இணைப்பதுடன் முக்கிய தளங்கள்வழியாக செல்லும்.

மயிலாடுதுறை – திருவாரூர் இடையே ரயில்பாதை:

மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் தொடக்கிவைத்தார்.

ரூ.423 கோடி மதிப்பில் 228 கிலோ மீட்டர் தூரம் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையை விரைவான போக்குவரத்திற்கு உதவும்.

மின்மய மாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தால் எழும்பூர் – கன்னியாகுமரி இடையே ரயில்வே லைனை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

ரு.1000 கோடியில் ஐஐடி வளாகத்திற்கு அடிக்கல்:

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் ஐஐடி டிஸ்கவரி வளாகம்கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் முதல்பகுதி 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...