மெட்ரோ ரயில்சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர்வரையிலான புதிய மெட்ரோ ரயில்சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கிவைத்தார்.

ரூ.3,370 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (பிப்.14) தொடக்கிவைத்தார்.

9.06 கிலோ மீட்டர் மெட்ரோ வழித்தடம் வடசென்னையை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துடன் இணைக்கும்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதியமெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.

கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதை:

இதேபோன்று சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார்.

துறைமுக போக்கு வரத்து நெரிசலை குறைக்க ரூ.293.40 கோடி செலவில் 22.1 கிலோ மீட்டர் தூரம் ரயில்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில்பாதை சென்னை, எண்ணூர், துறைமுகங்களை இணைப்பதுடன் முக்கிய தளங்கள்வழியாக செல்லும்.

மயிலாடுதுறை – திருவாரூர் இடையே ரயில்பாதை:

மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் தொடக்கிவைத்தார்.

ரூ.423 கோடி மதிப்பில் 228 கிலோ மீட்டர் தூரம் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையை விரைவான போக்குவரத்திற்கு உதவும்.

மின்மய மாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தால் எழும்பூர் – கன்னியாகுமரி இடையே ரயில்வே லைனை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.

ரு.1000 கோடியில் ஐஐடி வளாகத்திற்கு அடிக்கல்:

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் ஐஐடி டிஸ்கவரி வளாகம்கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் முதல்பகுதி 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...