பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார்

விஜயாப்புராவில் புதிதாக விமானநிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபணிகளை நேற்று காலையில் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்கும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைவதில் எனக்கு விருப்பம் இல்லை. முலவாடா பகுதியில் விமானநிலையம் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அப்பகுதியில் எனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு விமான நிலையம் அமைக்க நான் கூறுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு கூறினார்கள். அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

முலவாடா பகுதியில் அரசுக்கு சொந்தமான 2,500 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கு விமானநிலையம் அமைத்திருந்தால், அனைத்து வசதிகளும் கிடைத்திருக்கும். போதுமான இடவசதியும் விமான நிலையத்திற்கு கிடைத்திருக்கும். இந்தவிமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இதற்குதேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வசதிகளும் இருக்கும்வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.

முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறார். அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். முதல்மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். அவரது தலைமையிலேயே பா.ஜனதா ஆட்சி நடைபெறும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...