தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகளாக பாவிப்பதுடன் அதனை கையாளும்திறனும், மருத்துவரான எனக்கு உள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று பதவியேற்று கொண்ட பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என் மீது நம்பிக்கைவைத்து கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணைநிலை கவர்னராக இல்லாமல், மக்களுக்கு துணைபுரியும் கவர்னராக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகள் என் கையில் உள்ளது. இரட்டை குழந்தைகளை கையாளும்திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.
இந்திய தடுப்பூசியை வெளிநாட்டினர் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், நமதுநாட்டில் குறைவாக உள்ளது வேதனையாக உள்ளது. தடுப்பூசி போட்டுகொள்ள தயங்கக்கூடாது. கவர்னர் மற்றும் முதல்வரின அதிகாரம் எனக்குதெரியும். அவரவர் அதிகாராத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி செயல்படவேண்டும் என்பது எனது விருப்பம்.
அரசு மீதான பெரும்பான்மை தொடர்பான கோப்பை இன்னும் பார்க்கவில்லை. இதுதொடர்பாக அனைவரையும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நகர்வுகள் இருக்கும். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |