தேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம்

‘தேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம்; பாஜக தொண்டா்கள் தேசத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுவதுடன் கட்சியையும் வலுப்படுத்தவேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.

பாஜக தேசிய நிா்வாகக்குழு கூட்டம், கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவராக அவா் பொறுப்பேற்ற பிறகு, புதிய நிா்வாகிகள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனா். அதன்பிறகு நேரடியாக நடைபெற்ற முதல் நிா்வாகக்குழு கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். கரோனா தீநுண்மி தாக்கியதால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிசெலுத்தி கூட்டம் தொடங்கப்பட்டது.

கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘தேசத்துக்காகவும் தேசத்தின் வளா்ச்சிக்காகவும் பாடுபடவேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம்; பாஜக தொண்டா்கள், தேசத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுவதுடன் கட்சியையும் வலுப்படுத்தவேண்டும்.

புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் பாஜக தொண்டா்கள் எடுத்துரைக்கவேண்டும்’ என்றாா்.

வேளாண் துறையில் கொண்டு வந்துள்ள சீா்திருத்தங்கள், கரோனாதொற்று சூழலை கையாண்ட முறை ஆகியவற்றுக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவைதவிர, கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை திட்டங்கள், விரிவான பட்ஜெட்தாக்கல், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதல் போக்கை கையாண்டவிதம் ஆகியவற்றுக்காகவும் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரங்களை கூட்டத்துக்குப்பின் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் ரமண் சிங், பொதுச் செயலாளா் பூபேந்திர யாதவ் ஆகியோா் தெரிவித்தனா்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்ட பேரவைத்தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அந்ததோ்தல்களில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தரும் வகையில் கட்சித் தொண்டா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...