தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனாபரவல் மீண்டும் அதிகமாகி வரும் நிலையில், காலநேரமின்றி 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சிலமாதங்களாக படிப்படியாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல், கடந்த சிலநாட்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணைநோய் உடைய 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்படுகிறது. இதற்காக, கோ-வின் 2.0 செயலிமூலம் மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துவருகின்றனர். மேலும், நேரடியாக வந்து தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இந்தமாநிலங்களின் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று வெளியிட்ட டி விட்டர் பதிவில், “தடுப்பூசி போடுவதற்கான காலநேரத்தை அரசு நீக்கி உள்ளது. மக்கள் தங்களின் வசதிக்கேற்ப, 24 மணி நேரமும் அரசு, தனி்யார் மருத்துவமனைகள், மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்,’ என்று கூறியுள்ளார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |