தமிழகத்தின் தலையெழுத்தை, யார்தான் மாற்ற முடியும்?

முதல்வர் இ.பி.எஸ்., சாதாரண மக்களாலும் எளிதில் அணுகக் கூடியவர். மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதால், நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்; அதே வேளையில், ஒருவேளை தி.மு.க., வெற்றிபெற்றால்…? தற்போதுள்ள அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் மூடப்படும். அதற்குபதிலாக, தி.மு.க., குடும்பத்தில் ஒருவர், புதிய நிறுவனம் துவக்கி, கேபிள், ‘டிவி’ தொழிலை நடத்துவார்.

யார் கோடீஸ்வரர், எந்த குடும்பம் கோடீஸ்வர குடும்பம் என்ற, சண்டை சச்சரவுகள் மீண்டும் ஆரம்பிக்கும். தி.மு.க., குடும்பத்தில் இப்போதே, 10க்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் இயங்குகின்றன.இவர்கள் அரசுத்துறைகளில் ஆதிக்கம் செலுத்துவர். தமிழகபோலீசிலும் குடும்பஆதிக்கம் தலைதுாக்கும். மகன், மருமகன், தங்கை என, அதிகார மையங்களை, போலீஸ் உயரதிகாரிகள் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமா… பெரியப்பா குடும்பம், அத்தைகுடும்பம் என, ஏகப்பட்ட, ‘குரூப்’கள் தோன்றும். இதுபோக நண்பர்கள் வட்டாரம் எல்லாரும் தடிஎடுப்பர்; அதிகார வேட்டைஆடுவர். போதாக்குறைக்கு, மாவட்டம், வட்டம், கவுன்சிலர், எம்.எல்.ஏ., என, வடிவேலுவின், ‘வண்டுமுருகன்’ ‘காமெடி சீன்’ போல, காட்சிகள் அரங்கேறும்.

எந்த தொழில் செய்தால், கோடி ரூபாய்களைக் குவிக்கலாம் என்ற முடிவுடன், தி.மு.க., குடும்ப உறுப்பினர்கள் இறங்கி விடுவர். முன்பு, திரைத்துறையினையும், ‘மீடியா’க்களையும் தங்களின் கைக்குள் கொண்டு வந்தது போல, பிற துறைகளையும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவர். அப்புறம்… ‘சினிமா’வில், ‘ரிட்டயர்டு’ ஆன, வேலைவெட்டி இல்லாத ‘குரூப்’ இருக்கிறது. சத்யராஜ், பாரதிராஜா, கவுதமன் போன்றோர், தாங்கள்தான் தமிழகத்தின் கருத்தை பிரதிபலிக்கும் அறிவாளிகள் போல, அரட்டையை ஆரம்பித்து விடுவர். வைரமுத்து போன்ற, ‘அரசவை கவிஞர்’கள், வாரம் ஒருபாராட்டு விழாவை நடத்தி, புளகாங்கிதம் அடைவர். அதை, ‘ஜால்ரா டிவி’க்கள் ‘லைவ்’செய்து தங்களின் விசுவாசத்தை காட்டி, வயிறுவளர்த்துக் கொள்ளும். இதையெல்லாம் கண்டு தொலைக்க வேண்டுமென்பது, நம் தலைவிதி.

இருக்கவே இருக்கு, ஈ.வெ.ரா., குரூப். இவர்கள், எல்லா கோவிலின் முன்பும், ஈ.வெ.ரா., சிலைவைத்திட போராட்டம் நடத்துவர்; அவரது புராணத்தை, எல்லா பாட புத்தகங்களிலும் ஏற்றி விடுவர். சும்மா இருக்குமா, திருமா குரூப்? காலி நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆக்கிரமிப்புசெய்து, தங்களின் கட்சிக் கொடியை நாட்டி, உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுவர்; ஆவணங்களையும் தயார் செய்துவிடுவர். நிலத்தின் உரிமையாளர், கோர்ட்டுக்கும், போலீசுக்கும் ஓடி, தன் நிலம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். இதையெல்லாம் நினைத்தாலே நெஞ்சம்பதறுகிறது. ஒருவேளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால்… தமிழகத்தின் தலையெழுத்தை, யார்தான் மாற்ற முடியும்?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...