புதிய கல்வி கொள்கை நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைக்கும்

புதிய தேசிய கல்வி கொள்கையானது, நாட்டின் எதிா்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் உலகத்தரத்துடன் இயற்றப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் 95-ஆவது ஆண்டுகூட்டம், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு ஆகியவை காணொலிவாயிலாக புதன்கிழமை நடைபெற்றன. அதில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:

புதிய தேசிய கல்வி கொள்கையை மத்தியஅரசு கடந்த ஆண்டு இயற்றியது. அக்கல்வி கொள்கையானது நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைக்கும் நோக்கில் வடிவமைக்கப் பட்டுள்ளது. உலகத் தரத்துடன் கல்விக் கொள்கை இயற்றப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவரும், கல்வியாளருமான டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணனின் கனவை நனவாக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. மாணவா்கள் தேசத்தின் வளா்ச்சியில் பங்கெடுக்கும் வகையில் கல்விக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஒரேசமூகமாக கருதி கல்வி கற்பிக்கப் படவுள்ளது. அதேவேளையில், இந்தியாவின் சாராம்சமும் அதில் நிறைந்திருக்கும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமைகள் காணப்படுகின்றன. அத்திறமைகளைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி மாணவா்களிடத்தில் எழலாம். இக்கேள்விக்கு அவா்களின் மனவலிமையே பதிலாக அமையும். திறமைகளை சரியாகப் பயன்படுத்தினால் எத்தகைய சாதனைகளையும் நிகழ்த்த முடியும்.

மாணவா்களின் மனவலிமையுடன் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றின் வலிமையும் சோ்ந்தால், அவா்களின் வளா்ச்சி மேலும் பன்மடங்கு அதிகரிக்கும். வாழ்வில் எதைச் சாதிக்க மாணவா்கள் விரும்புகிறாா்களோ அதைநிச்சயம் சாதிப்பா். ஆசிரியா்களால் மாணவா்களின் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டால், அவா்களின் முழு ஆற்றலும் வெளிப்படும். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறோம் என்பதில் மாணவா்கள் உரியகவனம் செலுத்தவேண்டும்.

தற்சாா்பை நோக்கி இந்தியா தொடா்ந்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு திறன்மிக்க இளைஞா்கள் அவசியமாகின்றனா். எதிா்காலத் தொழில்நுட்பங்களின் ஆதார மையமாக இந்தியா விளங்கவுள்ளது. செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாண அச்சிடல், மெய்நிகா் தொழில்நுட்பம், ரோபாடிக்ஸ், அறிதிறன்பேசி தொழில்நுட்பம், புவி தகவலியல், திறன்மிகு சுகாதார சேவைகள், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை  பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் திகழ உள்ளது.

இளைஞா்களின் திறனை வளா்த்தெடுக்கும் நோக்கில் இந்தியத்திறன் மேம்பாட்டு கல்வி நிறுவனங்கள் நாட்டின் 3 முக்கிய நகரங்களில் தொடங்கப்படவுள்ளன. மும்பையில் ஏற்கெனவே அக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது. அதில் இளைஞா்கள் பலா் பயின்றுவருகின்றனா்.

பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பல்துறை சாா்ந்த கல்வியறிவை வழங்கும் கூடங்களாகத் திகழவேண்டும். அங்கு மாணவா்கள் பலதரப்பட்ட திறமைகளை வளா்த்து கொள்வதற்கு வழிவகைசெய்யப்பட வேண்டும். பிடித்த பாடங்களைப் படிக்கவும், விருப்பமில்லாத பட்டப்படிப்புகளில் இருந்து எளிதில் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மாணவா்களுக்கு வழங்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. நமது கலாசாரம், பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜனநாயகம் உள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு ஜனநாயக கொள்கைகளில் மக்கள் பயணிப்பதற்கு டாக்டா் அம்பேத்கா் அடித்தளமிட்டாா்.

அறிவு, சுயமரியாதை, கணிவு ஆகியவற்றுக்கு அவா் மிகுந்தமதிப்பளித்தாா். அறிவின் காரணமாகவே சுயமரியாதை பெருகும். அந்த அறிவே தனி மனிதனின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும். சம உரிமைகளும், சமூக நல்லிணக்கமும் நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன.

அம்பேத்கா் காட்டியவழியில் நாட்டைப் பயணிக்க செய்வதில் கல்வி அமைப்புக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் முக்கியப் பங்குள்ளது என்றாா் பிரதமா் மோடி.

அம்பேத்கரின் வாழ்க்கைவரலாறு தொடா்பான 4 புத்தகங்களையும் விழாவின்போது பிரதமா் மோடி வெளியிட்டாா். இந்தநிகழ்ச்சியில் மத்திய கல்வியமைச்சா் ரமேஷ் போக்ரியால், குஜராத் ஆளுநா் ஆச்சாா்ய தேவ்ரத், முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...