தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக

தமிழக சட்டமன்றதேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஆனால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் கவனிக்கத்தக்கது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வெற்றி. ஏனெனில் 1996ஆம் ஆண்டில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். இதையடுத்து 2001ல் திமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக 4 இடங்களில் வென்றது.

அதன்பிறகு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எம்ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டரில், ”ஒரு சாமானியன். 60 ஆண்டு காலமாக கட்சியின் அடிமட்டதொண்டன். பெயரும் செயலும் ஒன்றான காந்தி. உன்வெற்றி ஏழைகளின் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நெல்லை தொகுதியில் பாஜக.வின் நாயனார் நாகேந்திரன் 25000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்றுள்ளார்.

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 55,397 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் கமல் ஹாசன் முன்னிலை பெற்ற நிலையில், 23வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

One response to “தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...