தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக

தமிழக சட்டமன்றதேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஆனால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் கவனிக்கத்தக்கது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வெற்றி. ஏனெனில் 1996ஆம் ஆண்டில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். இதையடுத்து 2001ல் திமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக 4 இடங்களில் வென்றது.

அதன்பிறகு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எம்ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டரில், ”ஒரு சாமானியன். 60 ஆண்டு காலமாக கட்சியின் அடிமட்டதொண்டன். பெயரும் செயலும் ஒன்றான காந்தி. உன்வெற்றி ஏழைகளின் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நெல்லை தொகுதியில் பாஜக.வின் நாயனார் நாகேந்திரன் 25000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்றுள்ளார்.

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 55,397 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் கமல் ஹாசன் முன்னிலை பெற்ற நிலையில், 23வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

One response to “தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கிய பாஜக”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.