8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன

கரூர் மாவட்டம் குளித்தலையில் பாஜகசார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விளக்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரூரில் பாஜக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்று மாவட்டத் தலைவர் கேட்ட போது, குளித்தலையில் தான் கூட்டம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினேன். ஏனெனில் இதுவரை பாஜக கால்பதிக்காத இடங்களில், கூட்டம் சேராத இடங்களில் செய்துகாட்ட வேண்டும்.

அதற்காகதான் இப்படியொரு பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதுமட்டுமின்றி பாஜகவின் வளர்ச்சி இது போன்ற சிறு சிறு நகரங்களில்தான் இருக்கப் போகிறது. அதை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்ட உதவிகள்பலவும் குளித்தலை மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த குளித்தலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளோம்.

1957ல் குளித்தலை தொகுதியில் நடந்த இரண்டாவதுதேர்தலில் கருணாநிதி போட்டியிட்டு முதல்முறை வெற்றி பெற்றார். கொள்கைரீதியாக திமுக, பாஜகவும் நேரெதிர் கட்சிகள். இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகமக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1957ல் இருந்த திமுகவும், 2022ல் இருந்த திமுகவும் ஒரேகட்சியா? என்றால் நிச்சயம் கிடையாது.

ஒரு குடும்பத்திற்காக கட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் ஒவ்வொருமுறையும் திமுகவிற்கு ஓட்டுபோட்டு வெற்றிபெறச் செய்திருக்கிறீர்கள். ஆனால் பின் தங்கிய தொகுதியாக குளித்தலை காட்சியளிப்பது திமுக எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டுகிறது. 70 ஆண்டுகள் திராவிடஆட்சி. ஆனாலும் மாற்றம் இல்லை. அதேசமயம் 8 ஆண்டுகளில் தேசியளவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...