மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்யும் பாஜக

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய இந்தவன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த வன்முறைச் சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல்வன்முறை சம்பவத்தை வைத்து மம்தாவை தேசிய அளவில் ‘கார்னர்’ செய்ய மத்திய பாஜக திட்டமிட்டுள்ளதாக ‘டெக்கான் ஹெரால்டு’ வெளியிட்டசெய்தி ஒன்று தெரிவிக்கிறது. மேற்குவங்க பாஜக தலைவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியில், ‘தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக பிற மாநிலங்களின் கட்சித் தலைவர்களை சந்தித்து மம்தாவுக்கு எதிராக குரல்கொடுக்க வலியுறுத்தவேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை, மாநிலப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பிரசாரம் செய்து மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டுவதன் மூலம் தேசிய அளவில் திரிணாமூல்கட்சி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடம் எதிர்மறை இமேஜே ஏற்படுத்துவதே இதன்நோக்கம்.

மேற்கு வங்கத்தில் தற்போது இருக்கும் லாக்டவுன் போன்ற நிலைமை காரணமாக வன்முறை தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் மாநில பாஜக உள்ளன. எனவேதான் பாஜக தலைமை தேசியளவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு வன்முறையை எடுத்துரைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்வதும் இந்தமுயற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். இதனைசெய்ய திலீப் கோஷ், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி, கைலாஷ் விஜயவர்ஜியா, பூபேந்திர யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு பாஜக மத்திய தலைமை அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அழுத்தத்தின் காரணமாக இதுவரை மாநில பாஜக தலைமை 13 மாநிலங்களின் கட்சித் தலைவர்களுடனும் ஒருயூனியன் பிரதேச தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்தி வன்முறையின் தாக்கத்தை எடுத்துரைத்துள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப்கோஷ் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக தலைவர்களுடன் நேரடி சந்திப்புகளையும், குஜராத் மற்றும் மேகாலயாவில் உள்ள கட்சித்தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அவரைப்போலவே கைலாஷ் விஜயவர்ஜியா பீகார், பஞ்சாப், உத்திரகண்ட் மற்றும் யாதவ் ஆகிய இடங்களில் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புகளையும், பூபேந்திரயாதவ் அசாம் மற்றும் நாகாலாந்து மாநில கட்சித் தலைவர்களை சந்தித்தும் பேசியிருக்கின்றனர். இவர்கள் வலியுறுத்திய மற்ற மாநில தலைவர்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மம்தாவை குற்றம்சாட்டி மேற்கு வங்க பாஜக பேசியிருக்கிறது. தொடர்ந்து இந்தபிரசாரத்தை தீவிரப்படுத்த கட்சித் தலைமை அக்கறை கொண்டுள்ளது’ என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...