நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இருஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன்கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட இருக்கும் வெங்கடாசலபதி கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பிறகு அமைச்சா் கிஷண்ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுடன், பாதுகாப்புச் சூழல் நன்றாக மேம்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் கடலோரபாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டதுடன், ஊடுருவல் முயற்சிகள், கிளா்ச்சி நடவடிக்கைகள், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் என எந்தவொரு நிகழ்வும் ஏற்படவில்லை. எல்லைப்பகுதி தவிா்த்து பயங்கரவாத நடவடிக்கைகள் எங்கும் இல்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, நாட்டில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் எங்கும் நிகழவில்லை.

ஜம்முகாஷ்மீா் மற்றும் லடாக் வளா்ச்சிக்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை யோசித்திருந்தது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அதில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் கருத்தை அறியவும், வளா்ச்சிக்கான அவா்களது தேவையை தெரிந்துகொள்ளவும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் 36 மத்திய அமைச்சா்கள் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொருபகுதிக்கும் சென்றுள்ளோம்.

கடவுளின் ஆசீா்வாதத்தால் கரோனா போரில் நாம்வென்று, ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மக்களின் தேவையை அறிந்து அதை செயல்படுத்துவதில் மீண்டும் கூடுதல்கவனம் செலுத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் கட்டப்படும் வெங்கடாசலபதி கோயில், மதரீதியிலான சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். வைஷ்ணவி தேவி கோயிலுக்காக வருவோா், இனி வெங்கடாசலபதி கோயிலையும் தரிசிப்பா். இதனால் பிரதேசமக்கங்களுக்கு பொருளாதார ரீதியிலான பலன்கள் கிடைக்கும் என்று கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில் வெங்கடாசலபதி கோயிலும், அதுசாா்ந்த இதர கட்டுமானங்களும் மேற்கொள்வதற்காக 62.02 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...