அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்

அயோத்தி நகர வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை 2024-ம் ஆண்டுக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அயோத்தியை நவீனமயமாக்கும் திட்டம், ரயில் நிலையம், விமானநிலையம் அமைப்பது குறித்து யோகி விளக்கம் அளித்தார்.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்அமைக்க மாநில அரசு ரூ.1,000 கோடியும், மத்திய அரசு ரூ.240 கோடியும் ஒதுக்கி உள்ளது என்று அப்போது பிரதமரிடம் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார். அப்போது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்திக்கு செல்லவேண்டும் என்ற ஆசையை வருங்கால சந்ததியினர் மத்தியில் நாம் ஏற்படுத்தவேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இந்தியரின் கலாச்சார நினைவிலும் பொறிக்கப்பட்ட நகரமாக அயோத்தி இருக்கவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அயோத்தியில் பக்தர் களுக்கான தங்குமிடவசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்படும் மாளிகைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. மேலும் அங்கு ஒரு சுற்றுலாவசதி மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆகியவையும் கட்டப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-

One response to “அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...