அயோத்தி நகர வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை 2024-ம் ஆண்டுக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அயோத்தியை நவீனமயமாக்கும் திட்டம், ரயில் நிலையம், விமானநிலையம் அமைப்பது குறித்து யோகி விளக்கம் அளித்தார்.
அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்அமைக்க மாநில அரசு ரூ.1,000 கோடியும், மத்திய அரசு ரூ.240 கோடியும் ஒதுக்கி உள்ளது என்று அப்போது பிரதமரிடம் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார். அப்போது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்திக்கு செல்லவேண்டும் என்ற ஆசையை வருங்கால சந்ததியினர் மத்தியில் நாம் ஏற்படுத்தவேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
ஒவ்வொரு இந்தியரின் கலாச்சார நினைவிலும் பொறிக்கப்பட்ட நகரமாக அயோத்தி இருக்கவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அயோத்தியில் பக்தர் களுக்கான தங்குமிடவசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்படும் மாளிகைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. மேலும் அங்கு ஒரு சுற்றுலாவசதி மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆகியவையும் கட்டப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
1falsify