ஒவைசியின் சவாலை ஏற்கிறோம், 300 இடங்களில் வெல்வோம்

அகில இந்திய மஜ்லீஸ்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் சவாலை ஏற்க பாஜக தொண்டா்கள் தயாராக இருக்கிறாா்கள் என்று உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல்கட்சிகள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

இதில் ஓம்பிரகாஷ் ராஜ்பா் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்தாா். அந்தக் கூட்டணியில் அவரது கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது மேலும் பத்துககும் அதிகமான சிறுசிறு அமைப்புகளுடனும் கூட்டணி வைத்துள்ளனர் இது குறித்து பேசிய ஒவைசி, ‘யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உத்தர பிரதேச முதல்வராக அனுமதிக்க மாட்டோம். எங்கள் தரப்புநியாயம் சரியானது. அதற்காக கடுமையாக உழைப்போம். அதன்படியே அனைத்தும் நடக்கும். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றுவோம்’ என்றாா்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

ஒவைசி ஒருபெரிய தேசியத் தலைவா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோ்தல்பிரசாரத்துக்காக செல்கிறாா். அவருக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது. அவா் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளாா். அதனை ஏற்க பாஜகதொண்டா்கள் தயாராகவே உள்ளனா். உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் 300 தொகுதிகளுக்கு மேல்வெல்ல வேண்டுமென்று பாஜக தலைமை இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி நாங்கள் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊபி.,யில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...