தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்

இந்திய குறைதீர்வு அதிகாரியை நியமிக்க டுவிட்டர் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதை கடுமையாக கண்டித்துள்ள டில்லி உயர்நீதிமன்றம் , பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் புதியதகவல் தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவைசேர்ந்த நபர்களை மட்டுமே குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கவேண்டும். முதலில் டுவிட்டர் நிறுவனம் இதற்கு இணங்க மறுத்தது. பின்னர் காலஅவகாசம் கேட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய ஐ.டி., விதிகளுக்கு இணங்காததால் டுவிட்டரின் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியது. இதனால் அதன்தளத்தில் வெளியாகும் சட்டவிரோத கருத்துக்கள், படங்கள், வீடியோக்களுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் டுவிட்டரின் இடைக்கால குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திரசதுர் பதவி விலகினார். அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்திய குறைவுதீர்வு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியவிதிகளை பின்பற்றவில்லை என டுவிட்டருக்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் தொடர்ந்தவழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

டுவிட்டர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் சஜன் பூவய்யா, இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் 2 வாரங்கள் அதற்கு தேவைப்படும் என்று கூறினார்.

இப்பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி ரேகா பாலி, “உங்கள் பணிகள் முடிய எவ்வளவுநாள் ஆகும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நம் நாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என டுவிட்டர் கருதினால், நான் அதைஅனுமதிக்க மாட்டேன். டுவிட்டரிடமிருந்து முறையான காலக்கெடுதேவை. தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...