தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்

இந்திய குறைதீர்வு அதிகாரியை நியமிக்க டுவிட்டர் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதை கடுமையாக கண்டித்துள்ள டில்லி உயர்நீதிமன்றம் , பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் புதியதகவல் தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவைசேர்ந்த நபர்களை மட்டுமே குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கவேண்டும். முதலில் டுவிட்டர் நிறுவனம் இதற்கு இணங்க மறுத்தது. பின்னர் காலஅவகாசம் கேட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய ஐ.டி., விதிகளுக்கு இணங்காததால் டுவிட்டரின் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியது. இதனால் அதன்தளத்தில் வெளியாகும் சட்டவிரோத கருத்துக்கள், படங்கள், வீடியோக்களுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் டுவிட்டரின் இடைக்கால குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திரசதுர் பதவி விலகினார். அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்திய குறைவுதீர்வு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியவிதிகளை பின்பற்றவில்லை என டுவிட்டருக்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் தொடர்ந்தவழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

டுவிட்டர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் சஜன் பூவய்யா, இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் 2 வாரங்கள் அதற்கு தேவைப்படும் என்று கூறினார்.

இப்பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி ரேகா பாலி, “உங்கள் பணிகள் முடிய எவ்வளவுநாள் ஆகும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நம் நாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என டுவிட்டர் கருதினால், நான் அதைஅனுமதிக்க மாட்டேன். டுவிட்டரிடமிருந்து முறையான காலக்கெடுதேவை. தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...