புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்

புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைவலிமையாக கட்டமைப்பதில் அக்கொள்கை முக்கியபங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விகொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்தஆண்டு உருவாக்கியது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்தியாவை சர்வதேச அறிவுசார்வல்லரசாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.புதிய தேசிய கல்விகொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந் துள்ளது. இதையொட்டி, நேற்று பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். இதில், மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான், சில மாநிலங்களின் முதல்மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் புதிய தேசிய கல்விகொள்கையை களத்தில் அமல்படுத்த கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.இளம் தலைமுறையினருக்கு என்னமாதிரியான கல்வி அளிக்கிறோம் என்பதை பொறுத்துத் தான் எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்தை எட்டுவோம் என்பது இருக்கிறது. இந்தநாடு முற்றிலும் இளைஞர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் சாதகமாக இருக்கிறது என்பதற்கு புதிய கல்விகொள்கை உத்தரவாதம் அளிக்கிறது.நாட்டை வலிமையாக கட்டமைக்கும் மாபெரும் பணியில் புதிய கல்விகொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட செயற்கைநுண்ணறிவு திட்டம், இளைஞர்களை எதிர்கால சவால்களை சந்திக்க உகந்தவர்களாக மாற்றும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப் படும் பொருளாதாரத்துக்கு பாதையை திறந்துவிடும்.புதிய தேசியகல்வி கொள்கை, தாய் மொழிக்கும், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 8 மாநிலங்களில் உள்ள 14 என்ஜினீயரிங் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் என்ஜினீயரிங் கல்வியை கற்றுத்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்பேசினார்.

One response to “புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...