பாஜகவின் விவசாயிகள் போராட்டம் உணர்வுகளின் பிரதிபிம்பம்

மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் பதிலால் மேகதாது அணைவிவகாரம் முடிவுக்கு வரப்போகிறது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடகஅரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் நேற்று (ஆக. 05) காலை மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி தொடங்கிவைத்தார். போராட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஜி.கே.நாகராஜ், கருப்பு எம்.முருகானந்தம், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

“தமிழகத்தில் டாஸ்மாக் மதுவிற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை கூட்டும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, இதுவரை ஒருஆய்வு கூட்டமாவது நடத்தி உள்ளார்களா?

தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, விவசாயத் துறை அமைச்சரை தூரமாக வைத்துள்ளார். இதுவே தமிழகஅரசின் செயல்பாடுகளுக்கு ஒரு சான்று.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களது உண்ணாவிரத போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில், பாஜகவுக்கு வயிற்றில் பிரச்சினை உள்ளது என, கோழைத்தனமாகவும் கேவலமாகவும் பேசுகிறார். அவர் கட்சியைவிட்டு, வீட்டுக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.

கமல்ஹாசன் நடிப்பின் உச்சபட்சமாக, அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார். மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மய்யம் இல்லாமல் பேசிவருகிறார். அவருடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர், இவர் மட்டுமே தற்போது உள்ளார். கடந்த தேர்தலிலேயே மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

கர்நாடகாவில் உள்ள உதயா டிவி சேனல் கலாநிதிமாறன் உடையது. அவரது தம்பி தயாநிதி மாறன் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மனசாட்சியே இல்லாததால் மக்களிடம் சாட்சி சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள உண்மையான பாஜகவை கொச்சைப்படுத்தினால், அவர்களது அனைத்து விஷயங்களும் வீதிக்கு வந்துவிடும்.

கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து நாம் ஏன் கடிதம் எழுத வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறிவருகிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பாஜக எதிர்க்கும், அங்கு அணை கட்டக் கூடாது என சட்டம் தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் விவசாயிகள் பட்டினிச்சாவு அதிமாக நிகழ்ந்தது. ஆனால், மோடி ஆட்சிக்குவந்ததும் ஒருவிவசாயி கூட பட்டினியால் சாகவில்லை.

இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்துள்ளகூட்டம் பிரியாணி பொட்டலங்களுக்கும், டி-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அறப்போராட்டத்துக்காக வந்துள்ளனர்.

தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப் படுத்தினால் விடமாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுப்போம்”.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கர்நாடக எம்.பி. ஒருவர் மேகதாது அணை கட்டுவதற்கான திட்டஅறிக்கைக்கு எப்போது, மத்திய அரசின் அனுமதி வழங்கப்படும் என, கேள்வி எழுப்பியபோது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், மேகதாது திட்ட அறிக்கைக்கு, கடைமடை மாநிலமான தமிழகதத்தின் அனுமதி, காவிரிமேலாண்மை வாரியம் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு அனுமதி அளிக்காது என, திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேகதாதுன் பிரச்சினை முடிவுக்கு வர போகிறது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...