இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி : பிரதமர் பெருமிதம்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் கரோனா தடுப்பூசிதிட்டம் தொடங்கப்பட்டது. அப்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மட்டும் பயன் பாட்டில் இருந்தன.

கடந்த சிலமாதங்களாக தடுப்பூசி திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகின்றன. உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சராசரியாக 40 லட்சம் பேர் முதல் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘நாடுமுழுவதும் ஒரே நாளில் 49,55,138பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 50,10,09,609கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியிருப்பது கரோனாவுக்கு எதிரான போரில் புதிய உத்வேகம் அளிக்கிறது. அனைத்து குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 5.32 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. மகா ராஷ்டிராவில் 4.63 கோடி, குஜராத்தில் 3.56 கோடி, ராஜஸ்தானில் 3.46 கோடி, மத்திய பிரதேசத்தில் 3.42 கோடி, கர்நாடகாவில் 3.23 கோடி, மேற்குவங்கத்தில் 3.17 கோடி கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...