கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவில்இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது நிகழ்ந்த வன்முறையால் லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவுதினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்கமுடியாது. மக்களைப் பற்றி கவலைப்படாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பலலட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர், தங்கள் உயிரிழந்தனர்.
நமதுமக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவுதினமாக அனுசரிக்கப்படும்.
சமூகப்பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதவலுவூட்டலின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேச பிரிவினையின் நினைவுதினம் நமக்கு நினைவூட்டட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |