வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று

தியாகச்சுடர் தேசபக்த திலகம் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று.

‘வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

1908ல் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் ராஜ துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். சிறைவாசத்திலிருந்து மீண்டுவந்து வ.உ.சி திலகரைப்போல தமிழகத்தின் மாபெரும் தலைவராக வலம்வருவார் என்று பாரதி நம்பினார், கனவுகண்டார்.

ஆனால் சிறையில் செக்கிழுத்து உடலும் உள்ளமும் நொந்து விடுதலையாகி வெளியேவந்த வ.உ.சியை வரவேற்க நான்கு பேருக்கு மேல் இருக்கவில்லை.

வ.உ.சியின் தியாகத்தைக் கண்டு தமிழ்நாட்டு இளைஞர் மனதில் வீரஉணர்வு மிகுந்து ‘வாளாண்மை’ தோன்றவேண்டும் என்ற தன் விழைவையே பாரதி இப் பாடலில் வெளிப்படுத்துகிறார். வாஞ்சிநாதனின் வீரச் செயல் அதை மெய்ப்பித்தது. ஆனால், தமிழகத்தில் சுதேசியத்தின் குரல்வளை ஆங்கில அரசின் முதல்கட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலேயே நெரிக்கப்பட்டு விட்டது.

ஆயினும், மகாகவியின் வாக்கு பொய்க்கவில்லை. கப்பலோட்டிய தமிழரின் தேசபக்தியும், துணிவும், உறுதியும் இன்றும் நமக்கு உந்துதலைத் தந்து கொண்டிருக்கிறது. வ.உ.சி நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...