வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று

தியாகச்சுடர் தேசபக்த திலகம் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று.

‘வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

1908ல் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் ராஜ துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். சிறைவாசத்திலிருந்து மீண்டுவந்து வ.உ.சி திலகரைப்போல தமிழகத்தின் மாபெரும் தலைவராக வலம்வருவார் என்று பாரதி நம்பினார், கனவுகண்டார்.

ஆனால் சிறையில் செக்கிழுத்து உடலும் உள்ளமும் நொந்து விடுதலையாகி வெளியேவந்த வ.உ.சியை வரவேற்க நான்கு பேருக்கு மேல் இருக்கவில்லை.

வ.உ.சியின் தியாகத்தைக் கண்டு தமிழ்நாட்டு இளைஞர் மனதில் வீரஉணர்வு மிகுந்து ‘வாளாண்மை’ தோன்றவேண்டும் என்ற தன் விழைவையே பாரதி இப் பாடலில் வெளிப்படுத்துகிறார். வாஞ்சிநாதனின் வீரச் செயல் அதை மெய்ப்பித்தது. ஆனால், தமிழகத்தில் சுதேசியத்தின் குரல்வளை ஆங்கில அரசின் முதல்கட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலேயே நெரிக்கப்பட்டு விட்டது.

ஆயினும், மகாகவியின் வாக்கு பொய்க்கவில்லை. கப்பலோட்டிய தமிழரின் தேசபக்தியும், துணிவும், உறுதியும் இன்றும் நமக்கு உந்துதலைத் தந்து கொண்டிருக்கிறது. வ.உ.சி நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...