சட்ட விரோத ‘விசா’ விரைவில் கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு சட்ட விரோதமாக, ‘விசா’ வாங்கித்தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்திசிதம்பரம் விரைவில் கைதாகிறார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கிஇருப்பதால், அவரை கைதுசெய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரதுசெல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்துள்ளார். இதற்காக, அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சென்னை கோடம் பாக்கத்தைச் சேர்ந்த, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, என்பவர் இருந்துள்ளார். இதை, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, முதல் குற்றவாளியாக பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளியாக கார்த்திசிதம்பரம் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மற்றும் அவர்கள் நடத்திவந்த நிறுவனங்கள் மீது, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்தனர். அதன் அடிப்படையில், இருதினங்களுக்கு முன், சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள சிதம்பரம், கார்த்தி, பாஸ்கர ராமன்வீடு, அலுவலகங்களில், 12 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

சட்ட விரோதமாக விசாபெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கர ராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சிபிஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு, விமானம் வாயிலாக, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாமோசடி விவகாரத்தில், கார்த்திக்கு நெருக்கமான தொழில் வர்த்தர்கள் சிலருக்கும் தொடர்புஇருப்பது பற்றி, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

‘தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மின்திட்ட பணிகளுக்காகத் தான் சீன நாட்டினர் வரவழைக்கப்பட்டனர்’ என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் பாஸ்கரராமன் தெரிவித்துள்ளார். ஆனால், சீனநாட்டினர் உளவாளியாக கூட இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டிவருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் தற்போது, வெளிநாட்டில் உள்ளார். நாடு திரும்பியதும், கைது செய்யப்படுவார் என, சிபிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே, ஐஎன்எக்ஸ்., ‘மீடியா’ மற்றும் ‘ஏர்செல் மேக்சிஸ்’ ஊழல் விவகாரம் தொடர்பாக, இரண்டுமுறை கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...