இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை

இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லை மற்றும் சிவகாசியில் செய்தியாளர் களிடம் பேசும்போது திமுகவின் கடைசி ஆட்சிகாலம் இதுதான் என்று விமர்சித்தார். வரும்காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 -வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 5ம்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி நெல்லை டவுணில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை , மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் , மாநிலதுணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இதனைத்தொடர்ந்து சிதம்பரனாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மணிமண்டபத்திற்கு வெளிப்பகுதியில் கேக்வெட்டி அவரது படத்தை திறந்து வைத்தனர்.

இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், இது சரித்திர நாள் , சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 150 -வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வ.உ.சிதம்பர பிள்ளை ஒருசாதாரண மனிதர் கிடையாது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் விட்ட ஒருசாதனை நாயகன் ஆவார் . இன்று அவர் புகழ் நாடுமுழுவதும் பரவி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழகஅரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. பாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 முதல் 12 ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒருலட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன் பிரதிஷ்டை செய்துவழிபாடு நடத்துவார்கள் .

இது தனிமனித உரிமை. இதனைத்தடுக்க யாருக்கும் அனுமதியில்லை . மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்கவேண்டும், ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு முதல்வர் , அமைச்சர்கள் அதிகாரிகள் முடிவு செய்யக் கூடாது ஜனநாயக முறையில் இதனை ஏற்றுகொள்ள முடியாது, இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபட நடத்த அனுமதிக்கலாம் .

உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அவகாசம்கேட்டது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பாஜகவும் கலந்துகொள்கிறது கூட்டத்தின் நிறைவுக்கு பின் இதுகுறித்து முடிவு செய்யப்படும் . மாநில அரசு பாரதியார், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிப்பதை பாஜக வரவேற்கிறது .

கொடநாடு விவகாரத்தை பொறுத்த வரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை தேவையில்லாமல் சிக்க வைப்பதற்கான, தனிமனித தாக்குதல் நடந்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் தலைவர்களை பொய்யாக வழக்குகளில் சேர்ப்பதை, பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கின்றது. இந்தவழக்கில் பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெறும். தமிழகத்தில் பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. அடுத்து தமிழகத்தில் பாஜகவா, திமுகவா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதிமுகவுடன் எந்த குழப்பமும் இல்லாமல் கூட்டணி செல்கின்றது. வரும்காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம். இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம். இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...