வ.உ.சி தென்னகம் மட்டுமல்ல அகில இந்தியாவிலே பெரும்தலைவர்

அது அமெரிக்கா மெல்ல எழும்பி, ஜப்பான்கிழக்கே ரஷ்யாவினை வீழ்த்தி ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எச்சரிக்கை மணி அடித்தகாலம் உலக வல்லரசு பட்டத்தை பிரிட்டன் இழக்கும் என்ற அறிகுறி தென்பட்ட 1908ம் காலம். கொஞ்சம் அச்சமுற்றபிரிட்டன் கடுமையான முகத்தைகாட்ட ஆரம்பித்தது, குறிப்பாக பணம் அதன் பெரும் குறிக்கோளாது கூடவே கடுமையான இறுக்கங்களும் சட்டங்களும் வந்தன.

கம்யூனிசம் அலை அடித்த காலமென்பதால் தொழிலாளர் மேல் பெரும் கடிவாளம் இட்டிருந்தனர் அந்த 1908ல் நெல்லையில் பஞ்சாலைகள் அதிகம், தாமிரபரணி நதியின் தொடக்கபகுதியான அம்பைபகுதி முதல் தூத்துகுடி வரை ஏராளமான மில்கள் இருந்தன, நதிகரையிலும் அடுத்த பகுதியிலும் விளையும்பருத்தி இங்கேயே நூல்களாயின‌
அந்த தொழிலாளரின் நிலை மகா மோசமாய் இருந்தது, அந்தசிக்கலில் உள்ளே வந்தார் வ.உ சிதம்ரனார், கூடவே சுப்பிரமணியம் சிவா இவர்களுக்கு ஆதரவாக பாரதியார்.
வ.உ.சி அப்பொழுது தென்னகம் மட்டுமல்ல அகில இந்தியாவிலே பெரும்தலைவர், இரண்டாம் திலகர் என கொண்டாடபட்டார், அவர் கப்பல் எல்லாம்விட்டு வெள்ளையனை அலற வைத்தது அந்நேரமே பெரும் செல்வாக்கோடு அவர் நெல்லை பக்கம் சுற்றி வர அவருக்கு மக்களிடம் மரியாதைஇருந்தது, நெல்லை பஞ்சாலை தொழிலாளர்கள் அவர் சொல்வதையெல்லாம் கேட்டனர், அதனால் வெள்ளையனுக்கு சிக்கல்கள்வந்தன‌
இவ்வளவுக்கும் பஞ்சாலை தொழிலாளரின் உரிமைக்கும் நலனுக்கும் வெள்ளையன் சுரண்டலுக்கும் எதிராக குரலெழுப்பினார் சிதம்பரம்பிள்ளை

அவரை வெள்ளையன் முதலில் மிரட்டினான், கெஞ்சினான், எல்லா வித்தைகளையும் காட்டினான், வ.உ.சி அசரவில்லை போராட்டம் வெடித்தது, பெப்ரவரி 26ல் வெடித்த போராட்டத்தை மார்ச் 03ம் தேதிவரை மிக பெரிதாக மாற்றிகாட்டினார் வ.உ.சி.
அப்பொழுது கலெக்டர் ஆஷ், அவனுக்கு மேலதிகாரி வின்ச் இருவரும் பேசி பார்த்தும் தொழிலாளர் ஊதிய உயர்வின்றி போராட்டம் ஓயாது என அறிவித்தார் வ.உ.சி
அவரின் அழைப்பினை ஏற்று ரிக்சா , சலவைதொழிலாளி, பரிசல்காரன், வியாபாரி, அலுவலர், ரயில்வே ஊழியர் என எல்லோரும் திரண்டனர், நெல்லை ஸ்தம்பித்தது
விளைவு ஊதிய உயர்வுக்கு ஆங்கில அரசு இறங்கி வந்தது, பஞ்சாலைதொழிலாளர் மட்டுமல்ல எல்லா தொழிலாளருக்கும் ஊதிய உயர்வு 10 மணிநேரம் வேலை, ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடைத்தது கேட்டதை கொடுத்தாலும் வ.உ.சியினை குறிவைத்தது மேலிடம், ஆஷ் துரையின் கடிதம் அப்படி இருந்தது.

“இந்த சிதம்பரம் என்பவனை ஒடுக்காவிட்டால் மாபெரும்சிக்கலை நம் ஆட்சி சந்திக்கும், கட்டபொம்மன் காலத்தில் இருந்து இம்மக்கள் வித்தியாசமானவர்கள், சரியான தலைவன் கிடைக்கும் பட்சத்தில் பெரும் சவாலாக உருவெடுப்பார்கள் இந்தசிதம்பரம் ஏற்கனவே கப்பல் எல்லாம் விட்டு நம் வியாபரத்தை கெடுத்துகொண்டிருகின்றான், இப்பொழுது பஞ்சாலை பக்கமும் வந்துவிட்டான், இன்னும் விட்டால் பெரும் ஆபத்து”

இந்த ரகசிய கடிதம் பிரிட்டன் மேலிடத்தில் விவாதிக்கபட்டு முடிவு அன்றே எடுக்கபட்டு வாய்ப்புக்காய் காத்திருந்தனர் வாய்பினை கொடுத்தது கல்கத்தா சம்பவம், ஆம் விபின் சந்திரபால் எழுதிய கட்டுரை தொடர்பாக கைதுசெய்யபட்டு பின் விடுவிக்க பட்டார், அந்த விடுதலையினை தேசமே கொண்டாடியது அந்த கொண்டாட்டத்தை மகாஉற்சாகமாக கொண்டாடினார் வ.உ.சி யானைமேல் சந்திரபாலின் படத்தை வைத்து, நெல்லையெங்கும் சுற்றி வந்து நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் தைபூச மண்டபத்தில் வைத்து பெரும்கூட்டம் கூட்டினார்

கூட்டம் வந்தே மாதரம் என முழங்கி ஆர்பரித்தது வாய்ப்புக்காய் காத்திருந்த வெள்ளையன் களமிறங்கினான் குறிப்பாக ஆஷ் அதை விவரமாகசெய்தான் நாட்டின் அமைதியினை கெடுக்கும் கூட்டம் என வ.உசி மற்றும் சிவாவினை கைதுசெய்தான், ஆம் கலவரம் வேண்டும் அந்த கலவரத்தில் பலரை கொன்றாவது வஉசிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது அவன் திட்டம்

அவன் திட்டபடியே வஉசியினை கைதுசெய்யவும் கலவரம் வெடித்தது, மாபெரும் கலவரம் சில நாட்கள் நீடித்தது அப்பொழுது சுதந்திர கொடியினை அரசு அலுவலகம் பண்டகசாலை எல்லாம் ஏற்றி பிரிட்டிசாரை அலறவைத்தது நெல்லை முதல் சுதந்திரகொடி தாமிரபரணி கரையில்தான் கம்பீரமாக பறந்தது, வரலாற்றின் மறைந்தபக்கம் அவை ஆம் 1908ல் முதல் சுதந்திர கொடி அங்குதான் மார்ச் 13ம் தேதி பறந்தது.

ஆத்திரமுற்ற ஆஷ் துப்பாக்கி சூடுநடத்தி 4 பேரைகொன்றான், எனினும் நிலமை கட்டுக்கு அடங்கவில்லை நெல்லையில் பறந்து கொண்டிருந்த‌ சுதந்திர கொடியோடு நெல்லை ஆர்பரிக்க மாபெரும் கலவரம்மூண்டது அது திட்டமிடபடவில்லை, பெரும் முன்னேற்பாடு இல்லை ஆனால் வ.உசி மேல் கைவைத்ததால் நடந்தது விஷயம் பிரிட்டன் பாராளுமன்றம்வரை பரவியது, 1857ல் பிரிட்டன் அரசுக்கு இந்தியா சென்றபின் நடந்த பெரும் கலகம் அது என்பதில் லண்டன் கவலைகொண்டு பிரச்சினையினை தீவிரமாக நோக்கியது

ஆஷூக்கு உத்தரவுகள் வந்தன‌ வ.உசி தமிழகத்தைவிட்டு வெளியேற குறிப்பாக நெல்லை பகுதியினை விட்டு வெளியேற சம்மதித்தால் விடுதலைசெய்வோம் என தந்திரமாக கேட்டான் ஆஷ் வ.உ.சி சம்மதிக்கவில்லை , தன்தனிபட்ட அதிகாரத்தில் தேசவிரோத வழக்காக அதை மாற்றினான் ஆஷ் அந்த வழக்கில்தான் வ.உ.சி கடுங்காவல் சிறைபெற்று செக்கிழுத்தார் அப்பொழுதும் “இதுசெக்கல்ல பாரதமாதாவின் தேர்” என சந்தோஷமாக இழுத்தான் அப்பெருமகன், சுப்பிரமணிய சிவாவுக்கு தொழுநோய் வந்ததும் இக்காலத்திலே அதன் பின் கப்பல் போனது, சொத்துபோனது, போராட்டமும் திலகர் கையில் இருந்து காந்தி கைக்கு சென்றது

காந்தி வ.உசியினை திட்டமிட்டு மறைத்ததையும் நுணுக்கமாக அவமானபடுத்தி அலைகழித்து முடக்கியதையும், காங்கிரஸ்லில் அவரைதவிர்த்ததையும் பல இடங்களில் கண்டோம்வெளிவந்த சிதம்பரம் வலுவிழந்தார், பழையசெல்வாக்கு இல்லை ஆயினும் தாமிரபரணிகரை தொழிலாளர் நல் ஊதியமும் விடுமுறையும் பெறுவதில் அவருக்கு ஆனந்தம் இருந்தது அந்த தைபூச மண்டபத்தினை தனியேகண்டு கண்ணீர் விட்டார், அந்த கண்ணீர் தாமிரபரணி ஆறுமட்டும் அறிந்தது ஆம் அந்த மண்டபமே சிதம்பரனாரின் திடல், அந்த ஆற்றங்கரை பெருவெளியும் கூட்டம்கூடவும் கேட்கவும் விவாதிக்கவும் பொருத்தமான இடம் அந்த மண்டபம் வ.உசியின் நினைவுகளில் ஒன்று
அதன்பின் சென்னை சென்ற வ உ சி வறுமையில்வாடி செத்ததெல்லாம் உலகறியும் அந்த ஆஷ் துரையினை வாஞ்சிநாதன் இதற்குத்தான் சுட்டான்,

சொல்பவன் தலித் ஆதரவு என்பதால் வாஞ்சி சுட்டான் என்பதெல்லாம் திராவிட பொய் நெல்லையின் துப்பாக்கி சூட்டுக்கும், வ.வுசியினை தரித்திரனாக்கி தனிமைபடுத்தியதற்குமே வாஞ்சிநாதனின் துப்பாக்கி தோட்டா ஆஷை பழிவாங்கியது சுதந்திர இந்தியாவின் முதல் கலெக்டராக கொல்லபட்டான் ஆஷ், லண்டன் மறுபடி அதிர்ந்தது

ஆம் தொழிலாளர் போராட்டம் முதல் கலெக்டரை கொல்வதுவரை அதிர்வு கொடுத்த பூமி அது, பாண்டியனும் கட்டபொம்மனும் அங்கு எக்காலமும் உண்டு
வ.உ.சி காந்தியின் துரோகத்தில் வாடிசெத்தார் நெடுநாள் கழித்து வ.உ.சியின் வாரிசுகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு தியாகிகளின் வாரிசு உதவி வேண்டி வரியகோலத்தில் வந்து நின்றனர் அவர்களை சோகத்துடன் பார்த்து கொண்டிருந்தது அந்த தைபூசமண்டபம், அந்த கொடுமையினை பார்த்தபடி சோகமாக ஓடிகொண்டிருந்தது தாமிர பரணி…
இன்றும் நெல்லை ஆற்று பாலத்தை கடக்கும் பொழுது வ.உசியின் தியாகத்தை சொல்லியடி இடிந்து கிடக்கும் அந்த மண்டபம், வ உசி போலவே அதை கண்டுகொள்வார் யாருமில்லை நெல்லை எழுச்சி என பிரிட்டனின் ஆவணங்களில் அச்சத்தோடு எழுதபட்ட நாள், இனி இந்தியா நமக்கல்ல என அவன் உணர்ந்தநாள்.

வ உசியும் , அந்த தைபூச மண்டமும் கண்களுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள் அந்த தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது. ஆஷ்துரையின் கல்லறையும் தூத்துகுடியில் துறைமுகத்தின் வ.உ.சி பெயரும் இந்நாட்டில் தர்மம் மீண்டது, கொடுமை ஒழிந்தது, ஒருகாலமும் இந்நாடு இனி அடிமைபடாது, விடவும் மாட்டோம் என வருங்கால சந்ததிக்கு சொல்லிகொண்டே இருக்கும்..

தமிழக‌ அரசு வ.உ.சிக்கு 150 ஆம் ஆண்டு பெரும் மரியாதை என அறிவித்திருப்பது நல்ல விஷயம், அதை அந்த தைபூச மண்டபத்தில் சிதம்பரம்பிள்ளைக்கு மிகபெரிய அங்கீர்காரம் செய்யலாம், சிதம்பரம்பிள்ளைக்கு மிக பெரிய மரியாதை செய்ய மிக உகந்த இடம் அந்த செக்கிழுத்த சிறைக்கு பின் அதுதான் தமிழக‌ அரசு அதை செய்யும் என தேசாபிமானிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...