நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம்

தரமான உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், வேலை வாய்ப்பு பெருகும்” என ‘கதி சக்தி’ திட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திரதின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் ‘கதிசக்தி’ திட்டம் செயல்படுத்தப் படும் என அறிவித்திருந்தார்.

இந்ததிட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். தேசியமாஸ்டர் பிளான் ஆனது, 21ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ‘கதிசக்தி’ அளிப்பதுடன், இந்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுபெற உதவும்.

முந்தைய காலங்களில் திட்டங்கள் நடைபெறுகிறது என பதாகைகளை பலஇடங்களில் பார்க்கமுடியும். திட்டங்கள் துவக்கப்பட்டாலும், அது நிறைவு பெறாது. ஆனால், அதனை நாங்கள் மாற்றிஉள்ளோம். நாங்கள் திட்டமிட்டு, வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அகற்றப்படும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எந்தகட்சியும் முன்னுரிமை அளிப்பது கிடையாது. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால், நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம். இதன்மூலம் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெருகுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...