எனக்காக வீடு கட்டவில்லை : பிரதமர் மோடி உருக்கம்

‘எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை’ என டில்லியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள இந்த 2025ம் ஆண்டில் இந்தியா மேலும் வலுப்பெறும். இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

இன்று டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ந்த இந்தியாவில் சொந்த வீடுகளை வைத்து இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டு மக்களுக்கு சொந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சில குழந்தைகளை சந்தித்தபோது, ​​அவர்களின் கனவுகள் அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை விட உயர்ந்ததாக இருப்பதை என்னால் காண முடிந்தது.

டில்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் நிதியை டில்லி அரசு பாதியை கூட செலவிடவில்லை. டில்லி கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. மதுக்கடைகளில் ஊழல், அரசுப்பள்ளிகளில் ஊழல் என பல வழிகளில் மோசடி நடந்து வருகிறது. இன்று வீடுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் மகிழ்ச்சியில், பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். இன்று முழு நாடும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...