திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்

*திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்:*

மேடைகளில், தொலை காட்சி. விவாதங்களில் , ராஜன்குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களை பொடி பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட்முடிவுகள்.*

பொய்# 1:
நீட் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.

முடிவுகள்சொல்லும் உண்மை:

*இந்தாண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநிலபோர்ட்களில் படித்தவர்கள்.*

பொய்# 2:

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது கடினம்.

முடிவுகள் சொல்லும் உண்மை:

*திருச்சியில் மட்டும், அரசுநடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*

பொய்#3

அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட்தேர்வில் தகுதி பெற முடியாது. முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)

*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* *மூவருமே முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*

பொய்#4

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்தேர்வு. முடிவுகள்சொல்லும் உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறியபெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைசேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதிபெற்றுள்ளார்.* அரசு மருத்துவ கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக்கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.

பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு கடினமானது.

முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்தஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*

*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*

அனைவரும் அறியவேண்டியது:

*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*

செய்ய வேண்டியது: #1

நீதிமன்றத்தில் இந்ததரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவவேண்டும்.

#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.*

செய்வார்களா?

இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக் காட்சிகள் அலசுவார்களா?

*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்* .🙏🙏
நன்றி……

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...