திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்

*திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்:*

மேடைகளில், தொலை காட்சி. விவாதங்களில் , ராஜன்குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களை பொடி பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட்முடிவுகள்.*

பொய்# 1:
நீட் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.

முடிவுகள்சொல்லும் உண்மை:

*இந்தாண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநிலபோர்ட்களில் படித்தவர்கள்.*

பொய்# 2:

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது கடினம்.

முடிவுகள் சொல்லும் உண்மை:

*திருச்சியில் மட்டும், அரசுநடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*

பொய்#3

அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட்தேர்வில் தகுதி பெற முடியாது. முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)

*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* *மூவருமே முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*

பொய்#4

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்தேர்வு. முடிவுகள்சொல்லும் உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறியபெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைசேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதிபெற்றுள்ளார்.* அரசு மருத்துவ கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக்கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.

பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு கடினமானது.

முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்தஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*

*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*

அனைவரும் அறியவேண்டியது:

*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*

செய்ய வேண்டியது: #1

நீதிமன்றத்தில் இந்ததரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவவேண்டும்.

#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.*

செய்வார்களா?

இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக் காட்சிகள் அலசுவார்களா?

*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்* .🙏🙏
நன்றி……

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...