திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்

*திராவிடகட்சிகளின் பொய்களை பொடிப்பொடியாக்கும் NEET முடிவுகள்:*

மேடைகளில், தொலை காட்சி. விவாதங்களில் , ராஜன்குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களை பொடி பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட்முடிவுகள்.*

பொய்# 1:
நீட் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.

முடிவுகள்சொல்லும் உண்மை:

*இந்தாண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநிலபோர்ட்களில் படித்தவர்கள்.*

பொய்# 2:

அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது கடினம்.

முடிவுகள் சொல்லும் உண்மை:

*திருச்சியில் மட்டும், அரசுநடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட்தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*

பொய்#3

அரசுப்பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட்தேர்வில் தகுதி பெற முடியாது. முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)

*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* *மூவருமே முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*

பொய்#4

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட்தேர்வு. முடிவுகள்சொல்லும் உண்மை: கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறியபெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைசேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதிபெற்றுள்ளார்.* அரசு மருத்துவ கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக்கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.

பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு கடினமானது.

முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்தஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*

*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*

அனைவரும் அறியவேண்டியது:

*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*

செய்ய வேண்டியது: #1

நீதிமன்றத்தில் இந்ததரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவவேண்டும்.

#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும்.*

செய்வார்களா?

இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக் காட்சிகள் அலசுவார்களா?

*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்* .🙏🙏
நன்றி……

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...