காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை தமிழக பாஜகவின் மீதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைதும். அவர் திறந்தவெளி கல்வியில் படித்து வந்த பிஏ பாடத்திற்கான பரீட்சையினை ஆள்மாறாட்டம் செய்து எழுதினார் என்ற புனையப்பட்ட குற்றச்சாட்டும்.

உண்மையில் கல்வி மாபியாக்களின் கூடாரம் தமிழகம் என்றால் அதன் ஊற்றுக்கண் திமுக என்று தான் கூற வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடு, குளறுபடி. மருத்துவம் பயில மதிப்பெண்ணை விட பணமே பிரதானம். பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற குறுக்கு வழியை நாடிய போதிலும். பேருக்கு கூட விசாரணை இல்லை. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்டியது. .

அண்ணா பல்கலைக்கழகதில் வினாத்தாள் திருத்தத்தில் நடந்த பல கோடி மதிப்பிலான முறைகேடுகளில் முகாந்திரம் இருந்த போதிலும், எந்த துறையும் விசாரணைக்கு துணியவில்லை. அதனை களைய மத்திய அரசின் வழிகாட்டலில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்ட சூரப்பா தேவைப்பட்டார்.

பல லட்சம் பேர் பங்கு கொள்ளும் தமிழ்நாடு அரசு பனியாளார் தேர்வாணைய தேர்விலும் நம்பக தன்மை இருப்பதாக தெரியவில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முறைகேடுகளை களைய எடுத்த முயற்சிகளில் கடுகலவை கூட திமுக ஆட்சியாளர்கள் செய்ததில்லை. தங்கள் ஆட்சியில் கட்சியினருக்கு அரசுப் பணியில் சலுகை என்று ஒரு அமைச்சர் வெளிப்படையாக கூறும் அளவில்தான் அவர்களின் நேர்மை உள்ளது.

இந்நிலையில் பெயரளவுக்கு பேருக்கு பின்னே அலங்காரமாக மட்டுமே கூடிய திறந்தவெளி கல்வியில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டாராம், அதை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். என்ற தோனியில் பொய் வழக்குப் புனைந்துள்ளார்கள். அப்படி தமிழகம் முழுவதும் உண்மையில் பரிசோதித்திருந்தாள் பலரும் சிக்கியிருப்பார்கள் என்பதே நிதர்சனம். காவல்துறை சமீபத்தில் சேலத்தில் விலைமதிப்பற்ற கனிமத்தினை கடத்தி சென்ற லாரியை விடுத்து, அதனை பின்தொடர்ந்த பத்திரிகையாளரை பிடித்த கதைதான். என்ன செய்ய ஆள்பவர்கள், ஆட்டி படைப்பவர்கள் அப்படி.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...