காவல்துறை என்ன செய்ய ஆள்பவர்கள் அப்படி

ஒரு கட்சியின் வளர்ச்சி பிடிக்காவிட்டால் அதன் நிர்வாகிகளை தாக்குவது, அவமதிப்பது, பொய்வழக்குப் புனைவது, சிறையில் அடைப்பது என்பதெல்லாம் திமுகவின் எதேச்சதிகார குணங்களில் ஒன்று. தற்போது அத்தகைய குணத்தினை தமிழக பாஜகவின் மீதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைதும். அவர் திறந்தவெளி கல்வியில் படித்து வந்த பிஏ பாடத்திற்கான பரீட்சையினை ஆள்மாறாட்டம் செய்து எழுதினார் என்ற புனையப்பட்ட குற்றச்சாட்டும்.

உண்மையில் கல்வி மாபியாக்களின் கூடாரம் தமிழகம் என்றால் அதன் ஊற்றுக்கண் திமுக என்று தான் கூற வேண்டும். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் ஊழல், முறைகேடு, குளறுபடி. மருத்துவம் பயில மதிப்பெண்ணை விட பணமே பிரதானம். பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற குறுக்கு வழியை நாடிய போதிலும். பேருக்கு கூட விசாரணை இல்லை. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு இந்த முறைகேடுகளுக்கு முடிவு கட்டியது. .

அண்ணா பல்கலைக்கழகதில் வினாத்தாள் திருத்தத்தில் நடந்த பல கோடி மதிப்பிலான முறைகேடுகளில் முகாந்திரம் இருந்த போதிலும், எந்த துறையும் விசாரணைக்கு துணியவில்லை. அதனை களைய மத்திய அரசின் வழிகாட்டலில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்ட சூரப்பா தேவைப்பட்டார்.

பல லட்சம் பேர் பங்கு கொள்ளும் தமிழ்நாடு அரசு பனியாளார் தேர்வாணைய தேர்விலும் நம்பக தன்மை இருப்பதாக தெரியவில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முறைகேடுகளை களைய எடுத்த முயற்சிகளில் கடுகலவை கூட திமுக ஆட்சியாளர்கள் செய்ததில்லை. தங்கள் ஆட்சியில் கட்சியினருக்கு அரசுப் பணியில் சலுகை என்று ஒரு அமைச்சர் வெளிப்படையாக கூறும் அளவில்தான் அவர்களின் நேர்மை உள்ளது.

இந்நிலையில் பெயரளவுக்கு பேருக்கு பின்னே அலங்காரமாக மட்டுமே கூடிய திறந்தவெளி கல்வியில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டாராம், அதை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களாம். என்ற தோனியில் பொய் வழக்குப் புனைந்துள்ளார்கள். அப்படி தமிழகம் முழுவதும் உண்மையில் பரிசோதித்திருந்தாள் பலரும் சிக்கியிருப்பார்கள் என்பதே நிதர்சனம். காவல்துறை சமீபத்தில் சேலத்தில் விலைமதிப்பற்ற கனிமத்தினை கடத்தி சென்ற லாரியை விடுத்து, அதனை பின்தொடர்ந்த பத்திரிகையாளரை பிடித்த கதைதான். என்ன செய்ய ஆள்பவர்கள், ஆட்டி படைப்பவர்கள் அப்படி.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.