அந்த குழந்தை

அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத் திருக்கலாம்.
மிகவும் சுலபமானமுடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம்மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.

அதை இந்த சமுதாயத்தின் தலைசிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப் படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப் படுத்தியிருப்பார்கள்.

குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை. அவள் தேர்ந்தெடுத்தது கடினமானபாதை. அவள் இன்னும் சிலநாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
அவள் பெற்றோருக்கு மட்டும் நினைவில் வலியாக அவள் இருக்கக்கூடும்.
அவளைக் குறித்து எந்த எழுத்தாளனும் எழுதப் போவதில்லை. அவளது முடிவு எந்த திரைப்படத்திலும் சொல்லப்பட போவதில்லை.

ஆனால் அந்த குழந்தை தனது உயிரைக் கொடுத்தாள். தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.தர்மத்தை கைவிடவில்லை.தர்மத்துக்கான பலிதானியாக அவள் என்றென்றும் தீபமாக நிற்கிறாள்.

உணர்வுடைய இந்து சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான காவல்தேவதையாக அவள் நிற்கிறாள். தர்மத்தின் காவல்தேவதையாக அவள் நிற்கிறாள்.

அவள் நினைவு என்றென்றும் ஒவ்வொரு ஹிந்துவின் நினைவிலும் இருக்க வேண்டும் அவ்வாறு அந்நினைவு நின்று ஒளி கொடுக்க அக்குழந்தை தெய்வமாகவே போற்றப்பட வேண்டும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம் எப்படி வாழவேண்டுமென்பதைக் காட்டி சனாதன தர்மம் உயிரினும் உயந்ததென்பதைக் காட்டிய அந்தகுழந்தை இன்று இந்த மண்ணின் காவல் தெய்வம்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று அவளுக்கென்று தீபம் ஏற்றுவோம். அவள் நினைவாக ஒரு தெய்வ ஆலயமும் அவள் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் ஆலயத்திலும் ஒவ்வொரு குழந்தைகள் இந்து நூலகம் எழுப்புவதும் பாரத அரசே இக்குழந்தையின் நினைவை போற்றுவதும் அவசியமான விடயங்கள்.

நன்றி அரவிந்தன் நீலகண்டன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...