உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில் பாஜக. சார்பில் தேர்தலபிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்தோம்.
ஏழைகளுக்கு பிரதமர் கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேசன் பொருள் உள்ளிட்ட பலதிட்டங்கள் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், தங்களுக்கு கிடைத்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
பெருந்தொற்று காலத்தில், ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் வெறும்வயிற்றுடன் உறங்க நாங்கள் அனுமதித்தது இல்லை.
பெரிய சாலைகள், ரெயில், வான் போக்குவரத்து ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டன. மருத்துவ மற்றும் கலைக் கல்லூரிகளை கட்டிக் கொடுத்துள்ளோம்.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் பொய்பிரசாரம் செய்தது. தடுப்பூசி பணிகள் சரியாக நடந்தால், அரசிற்கு எதிராக எதுவும் பேசமுடியாது என கருதி வதந்தி பரப்பியது.
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை காங்கிரஸ் அவமதித்தது. அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பதிலடிகொடுக்க வேண்டும்.
இந்தியாவை ஒரு நாடாக கருதகூட காங்கிரஸ் மறுக்கிறது. தேவபூமி உத்தரகாண்டின் புனிதத்தன்மையை பா.ஜ.க. பாதுகாக்கும் என தெரிவித்தார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |