நாட்டின் நலனுக்காகவே வக்ப் சட்டத்திருத்த மசோதா -ஜேபி நட்டா

” வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை,” என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசினார்.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். பார்லிமென்ட் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துக்களை பெற்றனர்.

ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இம்மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.

திட்டங்களை அமல்படுத்தும்போது, மக்களின் நலனுக்கு தான் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் 70 ஆண்டுகள் வைத்து இருந்தது யார்? முத்தலாக் முறையை நிறுத்த பிரதமர் மோடிக்காக முஸ்லிம் பெண்கள் காத்து இருந்தனர். இந்த முறையை பலநாடுகள் நிறுத்திவிட்டன. எந்த கட்சியின் நலனுக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும் இம்மசோதா கொண்டு வரப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியா வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளன. இந்தியாவும் ஏன் சீரமைக்கக்கூடாது. வக்ப் வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்படக்கூடாதா? இவ்வாறு நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தலைசிறந்த தேசியவாதியான குமரி ஆ� ...

தலைசிறந்த தேசியவாதியான குமரி ஆனந்தன் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தமிழக ...

வெற்றி நாள் கொண்டாட்டம் பிரதமர� ...

வெற்றி நாள் கொண்டாட்டம் பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு மே 9ம் தேதி நடக்க உள்ள ரஷ்ய வெற்றிநாள் ...

தொழில்முனைவோரை உருவாக்கியுள்ள ...

தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது  முத்ரா கடன் திட்டம் “சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தாகத்தை தணிப்பதுடன், ...

பழங்காலத்தை நவீனத்துவத்துடன் � ...

பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம் – பிரதமர் மோடி பெருமிதம் ''பண்டையபாரம்பரியத்தை டிஜிட்டல்மயமாக்குவதன்மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன்இணைப்போம்'' என பிரதமர் மோடி ...

வரதக்கம் விண்வெளி பற்றி துபாய் ...

வரதக்கம் விண்வெளி பற்றி துபாய் இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் பட்டத்து ...

2029க்கு பிறகும் மோடியே பிரதமராக � ...

2029க்கு பிறகும் மோடியே பிரதமராக தொடர்வார் – தேவேந்திர பட்னவீஸ் பிரதமர் நரேந்திர மோடி 2029க்கு பிறகும் நாட்டை வழிநடத்துவார், ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...