இன்னும் 2 வருடங்களில் 50சதவீத விபத்து குறைஞ்சிடும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

பீகார் மாநிலத்தில் சுல்தாங்கஞ்ச் பகுதியில் கடந்த ஏப்ரல்மாதம் 20ம் தேதி இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதில் கங்கைநதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி, பீகார் மாநிலம் சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. இதற்கான காரணத்தை, எனது செயலாளரிடம் கேட்டேன். பலமான காற்று வீசியதால் பாலம் இடிந்து விழுந்ததாக சொன்னார். இதுபோன்ற காரணத்தை ஒருஐஏஎஸ் அதிகாரி எப்படி நம்புகிறார் என்றும், முறையான காரணத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை 50 சதவீதம்குறைக்கவும், அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலைகளில் உள்ள கரும்புள்ளிகளை கண்டறியவும் தனது அமைச்சக அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.

சாலைபாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களுடன் இணைந்து கூட்டாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கட்காரி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும் சாலைவிபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த சேவ்லைஃப் அறக்கட்டளை முன்வைத்த பல்வேறு உத்திகள் மற்றும் தீர்வுகளை விரைவில்பரிசீலித்து செயல்படுத்த மூத்த அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கும் போது, ​​உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என 3 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள கட்கரி, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் திட்டஇயக்குநர்கள் விபத்துக்கள் அற்ற பகுதியை உருவாக்குவோம் என விபத்துக்கான உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இதற்கு முன்னதாக சாலைவிபத்துக்களை குறைக்கும் விதமாக குழந்தைகளுக்கு ஹெல்மேட் கட்டாயம், வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் விபத்துகளை 50 சதவீதம் குறைக்கும்நோக்கில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் திட்டமான “iRASTE” திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை முயற்சியாக தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...