தமிழ் சமுதாயம், வேளாண்மையை அடிப் படையாகக் கொண்டது. மாடுகள், விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறதேதவிர, அது உணவாக பயன்படுத்திய வரலாறு இல்லை.
புலால் உணவு, இந்தநாட்டை ஆக்கிரமித்த அன்னியர்களிடம் தொற்றிய வியாதி. சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது, குறிப்பாக ஆதிதிராவிடமக்கள் மீது, மாட்டுக்கறி அடையாளத்தை திணிக்க நினைக்கின்றனர். தமிழர்களின் 75 சதவீதம் பேர், எந்தக்காலத்திலும் மாட்டுக்கறி உணவை தொடாதவர்கள். மீதமுள்ள 25 சதவீத மக்களும், சில சூழல்களில் மட்டுமே மாட்டுக்கறி சாப்பிட கூடியவர்கள். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்யமுடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக் கின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை, ஆதிதிராவிடமக்களின் உணவாக முத்திரைகுத்த முயற்சி செய்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு, அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள், மாட்டுக் கறியை என்றுமே உண்டதில்லை. மாட்டுக்கறி சாப்பிடும் ஒருசிலரின் உணவு பழக்கத்தை பொதுவாக்கி, இழிவை சுமத்துவதை ஏற்கமுடியாது. போலி அம்பேத்கரிய வாதிகளிடம், ஆதிதிராவிட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி,
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |