“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் ‘பெரும் மகிழ்ச்சி’ அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர முடியாமல் தவித்த தேவேந்திர ஃபட்நாவிஸா?

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்ததற்காக முதல்வர் பதவியே பரிசாக பெற்ற
ஏக்நாத் ஷிண்டேயா?

தொடர் தோல்விகளால் அரசியல் எதிர்காலமே இனி கிடையாது என்று சோர்வில் இருந்த
ராஜ் தாக்கரேவா?

ஆட்சியாளர்களை எதிர்த்ததால் மும்பையில் கால்வைக்க முடியாது என்று மிரட்டப்பட்டதோடு, வீட்டையும் இடித்ததால் பாதிக்கப்பட்ட நடிகை
கங்கனா ரனாவத்தா?

போதைபொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகனை கைதுசெய்ததால், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கால் குறிவைக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான அதிகாரி
சமீர் வான்கடேயா?

மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களின் முறைகேடுகளை சாடியதால், பொய் வழக்குகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியா?,

ஹிந்துத்துவாவை கைவிட கூடாது. அதை மீண்டும் உத்தவ் தாக்கரேக்கு ஞாபகப்படுத்த வீட்டுக்கு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவோம் என்று சொன்னதற்காக, உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
ரானா தம்பதியாரா?

இவர்களைப் போல பலரும் பலவிதமாக
மஹாராஷ்டிராவின்
மஹா விகாஸ் அகாடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை விட்டு சிவசேனா கூட்டணி பதவி விலகிய செய்தியறிந்ததும் இவர்கள் யாரையும் விட பெரும் மகிழ்ச்சி அடைந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் யாரென்று தெரியுமா?

வேறு ஒரு நபர் எழுதியதை குறிப்பிட்டு
ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து

“நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டதற்காக மாநிலம் முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதவு செய்யப்பட்டு கொலை மிரட்டல்களை சந்தித்து
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்து வந்த மஹாராஷ்டிர நடிகை “கேதகி சிதாலே”

“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

நன்றி வைரவேல் சுப்பையா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...