“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் ‘பெரும் மகிழ்ச்சி’ அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர முடியாமல் தவித்த தேவேந்திர ஃபட்நாவிஸா?

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்ததற்காக முதல்வர் பதவியே பரிசாக பெற்ற
ஏக்நாத் ஷிண்டேயா?

தொடர் தோல்விகளால் அரசியல் எதிர்காலமே இனி கிடையாது என்று சோர்வில் இருந்த
ராஜ் தாக்கரேவா?

ஆட்சியாளர்களை எதிர்த்ததால் மும்பையில் கால்வைக்க முடியாது என்று மிரட்டப்பட்டதோடு, வீட்டையும் இடித்ததால் பாதிக்கப்பட்ட நடிகை
கங்கனா ரனாவத்தா?

போதைபொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகனை கைதுசெய்ததால், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கால் குறிவைக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான அதிகாரி
சமீர் வான்கடேயா?

மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களின் முறைகேடுகளை சாடியதால், பொய் வழக்குகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியா?,

ஹிந்துத்துவாவை கைவிட கூடாது. அதை மீண்டும் உத்தவ் தாக்கரேக்கு ஞாபகப்படுத்த வீட்டுக்கு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவோம் என்று சொன்னதற்காக, உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
ரானா தம்பதியாரா?

இவர்களைப் போல பலரும் பலவிதமாக
மஹாராஷ்டிராவின்
மஹா விகாஸ் அகாடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை விட்டு சிவசேனா கூட்டணி பதவி விலகிய செய்தியறிந்ததும் இவர்கள் யாரையும் விட பெரும் மகிழ்ச்சி அடைந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் யாரென்று தெரியுமா?

வேறு ஒரு நபர் எழுதியதை குறிப்பிட்டு
ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து

“நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டதற்காக மாநிலம் முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதவு செய்யப்பட்டு கொலை மிரட்டல்களை சந்தித்து
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்து வந்த மஹாராஷ்டிர நடிகை “கேதகி சிதாலே”

“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

நன்றி வைரவேல் சுப்பையா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...