ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்டசேவைகள் கூட்டத்தில், “இந்த ஆண்டு முதல், தொலை சட்டசேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்” என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதன் மூலம், ஒருலட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொதுசேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெறமுடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலை சட்டசெயலி 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக, தொலைசட்ட சேவைகள் வெறும் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளன.
இந்த நிகழ்வின்போது, நீதித்துறை, சட்டம் மற்றும் நீதிஅமைச்சகம், தேசிய சட்டசேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து சட்டசேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன. அனைவருக்கும் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், குடிமக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய காரணியாக சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்கும் எங்களின் கூட்டு உறுதிப் பாட்டின் அடையாளமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்களின் சேவைகளை இத்திட்டத்தின்கீழ் பிரத்தியேகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர்கள் தற்போது பரிந்துரை வழக்கறிஞர்களாகவும் செயல் படுவார்கள், மேலும் வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தகராறுதவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்கான முறையை வலுப்படுத்தவும் உதவுவார்கள் என்றும் அமைச்சர் கிரண்ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தார்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |