மோடியின் நெகிழ்ச்சியான தருணம்

‘ஆப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக சிக்கி இருந்த பேராயர் அலெக்ஸிஸ் பிரேம்குமாரை மீட்டு வந்ததுதான் எனக்கு மிகவும் திருப்தியான தருணம்,’ என்று டில்லியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:
இந்நிகழ்ச்சியில் தான் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது. உங்களுடன் நான் பங்கேற்பது, நம் அனைவருக்குமே மறக்க முடியாததொரு தருணமாக அமைந்துள்ளது. உலகில் வன்முறையைப் பரப்பும் முயற்சிகள் நடக்கும்போது மனது வலிக்கிறது.

ஆண்டவர் கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த அனைவரும் பணியாற்றுவது முக்கியம். பத்தாண்டுகளுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து பேராயர் அலெக்சிஸ் பிரேம் குமாரை பத்திரமாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணம். அவர் எட்டு மாதங்கள் அங்கேயே சிக்கி, பிணைக் கைதியாக இருந்தார்.

எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் தூதரகப் பணிகள் மட்டும் அல்ல. குடும்ப உறுப்பினர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு.அவர்கள் எங்கிருந்தாலும், எந்த நெருக்கடியை எதிர்கொண்டாலும், இன்றைய இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை தனது கடமையாகப் பார்க்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...