‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல

கடந்த ஜூன் 18-ம்தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு பாதபூஜை செய்து வணங்கினார். அதோடு தாயின் வாழ்க்கை குறித்த நினைவலைகளை வலைப்பதிவில் வெளியிட்டார். அதன் சாரம்சம் வருமாறு:

‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தைஅல்ல. அன்பு, பொறுமை,நம்பிக்கை என அந்த வார்த்தைக்கு ஆயிரம்அர்த்தங்கள் உள்ளன. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் குணநலன்கள், தன்னம்பிக்கையை செதுக்கிவளர்க்கிறார். பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார்.

எல்லா தாய்மார்களையும்போல எனது தாயும் மிகவும் எளிமையானவர், அற்புதமானவர். குஜராத்தின் வட்நகரில் மண் சுவர், ஓடு வேய்ந்த ஒற்றை அறைகொண்ட சிறிய வீட்டில் நாங்கள் வசித்தோம். அந்த வீட்டில் கழிப்பறை, குளியல்அறை கிடையாது.

வீட்டை ஒட்டி மூங்கிலால் ஒருபரணை எனது தந்தை அமைத்தார். அதுதான் எங்களது சமையல் அறை. அந்தபரணில் ஏறி எனது தாய் சமையல் செய்வார்.ஒருபோதும் அவர் உணவு வகைகளை வீணாக்க மாட்டார்.

எனது தந்தை வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனைசெய்தார். நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு அவர் பணிக்குச்செல்வார். அப்போதே எனது தாயும் எழுந்துவிடுவார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் ஒருவரேசெய்வார். வீட்டுச் செலவுகளை சமாளிக்க அண்டைவீடுகளில் பாத்திரங்களை கழுவினார். அதோடு ராட்டையில் நூல் நூற்றார்.

மழைக்காலத்தில் எங்கள் வீட்டின் கூரைஒழுகும். அப்போதுஎனது தாய் வாளிகள், பாத்திரங்களில் மழைநீரை சேகரிப்பார். அந்த தண்ணீரை அடுத்த சிலநாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார். அப்போதே அவர்மழைநீரை சேகரித்தார். எனது தாய் எப்போதுமே தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பார். பசு சாணத்தால் வீட்டை மெழுகி சுத்தமாக வைத்திருப்பார். மண் சுவரில் கண்ணாடி துண்டுகளை பதித்தும் ஓவியங்களை வரைந்தும் வீட்டை அழகு படுத்துவார்.

எனது தாய் பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை. அவர் தங்க நகைகளை அணியவில்லை, நான்வீட்டை விட்டுவெளியேற முடிவுசெய்தபோது, “உன் மனம் சொன்னபடி செய்” என்று ஆசிர் வதித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக தாயை சந்தித்து ஆசிபெற சென்றேன்.

அப்போது அவர், ‘‘உன்னுடைய அரசு பணி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நீ ஒருபோதும் லஞ்சம் வாங்காதே’’ என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தொலைபேசியில் பேசும்போதெல்லாம், ‘‘எந்தத்தவறும் செய்யாதே, ஏழைகளுக் காக உழைத்துக்கொண்டே இரு” என்று அன்பு கட்டளையிட்டார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.