‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி

‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா் களால் கவனிக்கப் பட்டு வருகிறது’ என்று மக்களவையில் மத்தியஅரசு வெள்ளிக்கிழமை பதிலளித்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கும் ‘க்வாட்’ அமைப்புக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி.முரளீதரன் எழுத்து பூா்வமாக அளித்த பதில்வருமாறு:

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சா்வதேச சட்டம் மற்றும் விதிகள் சாா்ந்த ஒழுங்கு முறை கோட்பாடுகளின் அடிப்படையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, அமைதி, வளம் ஆகியவற்றை நிலை நாட்டுவதற்கான உறுதிப் பாட்டை ‘க்வாட்’ நாடுகள் பகிா்ந்துள்ளன.

தவறான தகவல்கள் மூலம் இந்த அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் அமைச் சா்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், சுகாதாரம், பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, எரி சக்தி, விநியோக சங்கிலி, போக்குவரத்து தொடா்பு, உள் கட்டமைப்பு, கல்வி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகள் பலனடைவதற்கான உறுதியான செயல் திட்டத்தில் ‘க்வாட்’ அமைப்பு கவனம் செலுத்தும். இப்பிராந்தியத்தில் ‘க்வாட்’ நடவடிக்கைகளை அமலாக்கு வதற்கான பணிக் குழுக்களும் இதர அமைப்பு முறைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த செயல் திட்டத்தின் கீழ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா வால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப் பூசிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. மேலும், இயற்கை பேரிடா் களின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கூட்டுறவை நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முரளீதரன், ‘கரோனா பரவல் சூழலைத்தொடா்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க விசா பெறுவதில் இந்திய மாணவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிந்துள்ளது. இந்தவிவகாரம், அமெரிக்க அரசின் உயா் நிலை அளவில் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது’ என்றாா்.

மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, ‘ரஷிய-உக்ரைன் போரைத்தொடா்ந்து, ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் உக்ரைனில் இருந்து மாணவா்கள் உள்பட 18,282 இந்தியா்கள் மீட்கப் பட்டனா்’ என்றாா்.

உக்ரைனில் கல்வியைதொடர அங்கு பயணிக்க இந்திய மாணவா்கள் அனுமதிக்கப் படுகின்றனரா? என்ற கேள்விக்கு, ‘மாணவா்கள், உக்ரைனுக்கு செல்லமுடியும். ஆனால், உக்ரைனில் நிலவும்சூழல் மற்றும் பாதுகாப்புகருதி, அங்கிருந்து இந்தியா்கள் வெளியேறவே மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது’ என்று மீனாட்சி லேகி பதிலளித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...