”விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. எனவேதான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.
அந்தநிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடிவரும் வேளையில், நாடு புதிய வரையறை களையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கிவருகிறது.
விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில்இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்.
பணம்இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இந்தஅரசு உறுதியாக உள்ளது. எனவேதான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு அளிக்கிறது.
விளையாட்டுத் துறைமீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.
கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவுஅளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால்தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது.
கடந்த 2014க்கு முன், விளையாட்டு துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்றுமடங்கு அதிகம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |