விளையாட்டுத் துறையை விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்

”விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. எனவேதான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.

அந்தநிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடிவரும் வேளையில், நாடு புதிய வரையறை களையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கிவருகிறது.

விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில்இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்.

பணம்இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இந்தஅரசு உறுதியாக உள்ளது. எனவேதான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு அளிக்கிறது.

விளையாட்டுத் துறைமீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.

கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவுஅளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால்தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2014க்கு முன், விளையாட்டு துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்றுமடங்கு அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...