ஒரு லட்சம் பழங்குடியின மக்களுக்கு வீடுகள்

பிரதமர்  பழங்குடியின வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒருலட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி. ”அரசின் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்ற டைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றபாதையில் செல்லும்” என கூறினார்.

பழங்குடியின மக்களின் சமூகபொருளாதார நிலையை உயர்த்துவதற்காக பிரதமர் பழங்குடியின நலத்திட்டம் துவங்கப்பட்டது.  பாதுகாப்பான வீடுகள் சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரம் சிறப்பான கல்வி ஆரோக்கியம் மற்றும் ஊட்ட சத்து மின்சாரம் சாலை மற்றும் தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டின் தொலைதுார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடுகட்டுவதற்கான நிதி அளிக்கப்படுகிறது.

முதல் தவணையாக ஒரு லட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி நேற்றுஅளித்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சி ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. பட்டியலின பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டத்துக்கான நிதி ஐந்துமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பழங்குடியின மாண வர்களின் கல்விக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு தரமானகல்வி வழங்குவதற்காக துவக்கப்பட்ட ஏகலைவா மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கையை 90ல் இருந்து 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியின மக்களில் மிகவும் பின் தங்கிய மக்கள் அரசின் ஒவ்வொரு நலதிட்டத்திலும் முழுமையான பலனை அடைவதை உறுதி செய்ய இந்த அரசு தீவிரமாக உள்ளது. பழங்குடியின மக்களுக்கான நலதிட்டங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பேசியுள்ளேன்.

அதே சமூகத்தில் இருந்துவரும் அவர் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அதன் அடிப்படையிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. உங்களுக்காக நான்குகோடி வீடுகளை இந்த அரசு கட்டித்தர உள்ளது. முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட உங்களை அடையாளம் கண்டு உங்களுக்குதேவையான உதவிகளை செய்வதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சொந்தவீடு கட்டிக் கொள்வதற்கான முதல் தவணை பெற்ற ஒருலட்சம் பயனாளர்கள் வீடுகளில் இன்றைக்குதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன்  என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...