சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியரை ஒடுக்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜம்முவின் கத்துவாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு, குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பயங்கரவாத சம்பவங்களை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உள்ளூரில் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம், கடந்த பத்து ஆண்டுகளில் உதம்பூர்-கதுவா தோடா நாடாளுமன்றத் தொகுதியை மிகச் சிறப்பாக மாற்றி அமைத்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் கூறினார். வட இந்தியாவின் முதல் உயிரி தொழில்நுட்ப பூங்கா, விதை பதப்படுத்தும் ஆலை, அடல் சேது பாலம் உட்பட பல பாலங்கள் என பல திட்டங்கள் இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக் பதவிக்காலத்தில் இந்த வளர்ச்சிப் பயணம் விரைவடையும் என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |