அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது

இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். இதை நிறைவேற்றுவதற்காக, அடுத்த ஐந்துஆண்டுகளில் செய்யப்போகும் செயல் திட்டங்களை அவர் கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது, ராஜ்யசபாவில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்வர இருக்கும் தேர்தலில் ஜெயித்து மீண்டும் பிரதமராகி, அடுத்த ஐந்துஆண்டுகளில் செய்யப்போகும் அதிரடியான செயல் திட்டங்களை கோடிட்டு காட்டினார் மோடி.

மோடி 3.0 என்று இப்போதே பேசத்துவங்கிவிட்டனர். மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி, இந்தியாவை வளர்ந்தநாடாக்க முழு முனைப்புடன் செயல்படும். வளர்ந்தபாரதம் என்பது வெறும் கோஷமல்ல, அது என் உத்தரவாதம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிஎம்.கிசான், இலவச காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான்பாரத், அனைவருக்கும் சொந்தவீடு வழங்கும் பி.எம். ஆவாஸ் யோஜனா, இலவச ரேஷன், குறைந்த விலையில் மருந்து போன்றவை தொடரும்.

மருத்துவ சிகிச்சை கட்டணங்கள் குறைக்க ப்படும். குழாய் வாயிலாக சமையல்காஸ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு தரப்படும். சூரியமின்சக்தி கிடைக்கும் என்பதால், மின்கட்டணம் செலுத்த அவசியமில்லாத நிலை உருவாக்கப்படும். ஒருலட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும். காப்புரிமை பெறுவதில் சாதனை படைக்கப்படும்.

மிகச் சிறந்த பல்கலைகள், சர்வதேச விளையாட்டு களில் பங்கேற்பு, பொது போக்குவரத்தில் மறுமலர்ச்சி, புல்லட்ரயில் என, பலவசதிகள், திட்டங்கள் செயல்படுத்துவோம். செயற்கை நுண்ணறிவு விரிவாக பயன் படுத்தப்படும். பசுமை தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், மாசில்லா எரிசக்தி என, பலவற்றையும் இந்நாடு சந்திக்க உள்ளது.

காங்கிரஸ் மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதனால்தான், லோக்சபாவில் அதன்பலம் தொடர்ந்து குறைந்துவருகிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரானது காங்கிரஸ். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்காது. அதுபோல, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் எதிரானது காங்கிரஸ்.

நேரு பிரதமராக இருந்தபோது, மாநில முதல்வர்களுக்கு ஒருகடிதம் எழுதினார். இடஒதுக்கீடு குறிப்பாக வேலைவாய்ப்புகளில் அளிப்பதால், அரசு நிர்வாகம் பாதிக்கப்படுவதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். தங்களுடைய குடும்பத்தினருக்கு மட்டும் பாரத ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கரை புறக்கணித்தது. ஆனால், தற்போது எங்களுக்கு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பாடம் எடுக்கின்றனர்.

மாநில அரசுகளை கலைத்து ஜனநாயகத்தின் குரலை நசுக்கியவர்கள், பத்திரிகைகளின் குரல்வளையை நெரித்தவர்கள், தற்போது நாட்டைதுண்டாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டை பிடித்திருந்த பலபிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களுடைய இரண்டு ஆட்சிகாலத்தில் அவற்றை தீர்த்து வைத்தோம்.

காங்கிரசின் சிந்தனை செயல்திறன், பழதாகி, உதவாத நிலைக்கு சென்றுவிட்டது. தங்களுடைய சொந்தத் தலைவர்கள் மற்றும் கொள்கைகளுக்கே உறுதிஅளிக்க முடியாத இவர்கள், மோடியின் உறுதிமொழிகள் குறித்துகேள்வி எழுப்புகின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் வகையில், வடக்கு, தெற்கு என்று பிரித்து பேசுகின்றனர்.

எங்களுடைய வரி, எங்களுடைய பணம் என்று பேசுகின்றனர். ஒரு உடலில் அனைத்து உறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக செயல்படவேண்டும். இந்தியா என்பது பல அங்கங்கள் இணைந்த உடல். அதை பிரித்து பார்க்கக்கூடாது. அரசியலுக்காக அவர்கள் பேசும் பேச்சு வலியை ஏற்படுத்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கம் காங்கிரசில் தற்போதும் உள்ளது. அதனால்தான், அவர்கள் விட்டுச் சென்ற அடிமைத்தனம், பிரிவினைவாத கொள்கையை காங்கிரஸ் தொடர்கிறது.

வரும் தேர்தலில், காங்கிரசுக்கு 40 இடங்கள்கூட கிடைக்காது என்று மேற்கு வங்கத்தில் இருந்து குரல் எழுந்துள்ளது. குறைந்தபட்சம் அந்த இடங்களையாவது காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ள கடவுளை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...