நீட் முறைக்கேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதி படுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

“நீட் முறைகேடுகளைத்தவிர்க்க பாதுகாப்பான தேர்வு முறையை உறுதிப்படுத்தவேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நீட் முறைகேடு மற்றும் நெட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எம். சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையிலும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த அக். 21-இல் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

பாதுகாப்பான தேர்வை உறுதிப்படுத்த மாநிலங்கள், மாவட்ட அரசு நிர்வாகத்துடன் வலுவான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைத்து என்டிஏ தேர்வுகள் வெளிப்படையாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல, “நீட், யுஜிசி நெட் தேர்வுகள் மிக மோசமாக கையாளப்பட்டது தொடர்பாக துறை அளவிலான மறுஆய்வை மேற்கொண்டதா’ என்று மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், “கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவுட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பரவலாக முறைகேடுகள் நடைபெறவில்லை, தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...