மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு “டைம்ஸ் நவ்”  நிறுவனத்தின் மருத்தவ  விருதுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று  (29.06.2024) வழங்கினார். இந்தியாவில்  ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “டைம்ஸ் நவ்” ஊடகக்குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் வயதினரிடையே நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.  நீரிழிவு நோய், இளம் வயதில் மாரடைப்பு, புற்று நோய்கள் போன்றவை அதிகரித்து வருவது சுகாதார சவால் மட்டுமின்றி, இளைஞர்ளின் சக்தியைக் குறைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது,  2047-ல் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைந்து அடைய உதவும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 போன்ற சவாலான காலங்களில், மருத்துவர்கள் செய்த தியாகங்களை இந்தியா அங்கீகரித்து கௌரவிக்கிறது என்றும், மருத்துவர்கள் தினம் என்பது நமது மருத்துவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் ஒரு சிறப்பு தினம் என்றும் அவர் கூறினார். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் ல்வாழ்வை உறுதி செய்வதில் மருத்துவர்களின் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமின்றி, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும்  உலகளாவிய முன்னணி நடாக இந்தியா மாறியுள்ளது என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு என்பது அலோபதி மருத்துவத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும் ஆயுஷ் மற்றும் பிற முறைளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவர்களுக்கு சிறந்த பணி நிலைமை, தொடர்ச்சியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...