மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு “டைம்ஸ் நவ்”  நிறுவனத்தின் மருத்தவ  விருதுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று  (29.06.2024) வழங்கினார். இந்தியாவில்  ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “டைம்ஸ் நவ்” ஊடகக்குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் வயதினரிடையே நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.  நீரிழிவு நோய், இளம் வயதில் மாரடைப்பு, புற்று நோய்கள் போன்றவை அதிகரித்து வருவது சுகாதார சவால் மட்டுமின்றி, இளைஞர்ளின் சக்தியைக் குறைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது,  2047-ல் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைந்து அடைய உதவும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 போன்ற சவாலான காலங்களில், மருத்துவர்கள் செய்த தியாகங்களை இந்தியா அங்கீகரித்து கௌரவிக்கிறது என்றும், மருத்துவர்கள் தினம் என்பது நமது மருத்துவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் ஒரு சிறப்பு தினம் என்றும் அவர் கூறினார். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் ல்வாழ்வை உறுதி செய்வதில் மருத்துவர்களின் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமின்றி, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும்  உலகளாவிய முன்னணி நடாக இந்தியா மாறியுள்ளது என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு என்பது அலோபதி மருத்துவத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும் ஆயுஷ் மற்றும் பிற முறைளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவர்களுக்கு சிறந்த பணி நிலைமை, தொடர்ச்சியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கட், காப்பி,பேஸ்ட் இதுதான் மாநி ...

கட், காப்பி,பேஸ்ட் இதுதான் மாநிலக்கல்வி கொள்கை சர்வதேச அரசியல்குறித்து படிப்பதற்காக லண்டன் செல்வது குறித்து நேரம் ...

மருத்துவ தினத்தை முன்னிட்டு அண ...

மருத்துவ தினத்தை முன்னிட்டு அணைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் பிரதமர் நரேந்திர ...

ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப ...

ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் ...

மூன்று புதிய குற்றவியல் சட்டங் ...

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித் ஷா விளக்கம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள 3 ...

9- ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்ட ...

9- ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் பாராட்டு டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் ...

மருத்துவ வல்லுநர்களுக்கு டைம் ...

மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார் நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...