மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்

நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு “டைம்ஸ் நவ்”  நிறுவனத்தின் மருத்தவ  விருதுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நேற்று  (29.06.2024) வழங்கினார். இந்தியாவில்  ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு “டைம்ஸ் நவ்” ஊடகக்குழுமம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் வயதினரிடையே நோய்த் தடுப்பு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.  நீரிழிவு நோய், இளம் வயதில் மாரடைப்பு, புற்று நோய்கள் போன்றவை அதிகரித்து வருவது சுகாதார சவால் மட்டுமின்றி, இளைஞர்ளின் சக்தியைக் குறைக்கும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது,  2047-ல் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை விரைந்து அடைய உதவும் என்று அவர் கூறினார்.

கொவிட் -19 போன்ற சவாலான காலங்களில், மருத்துவர்கள் செய்த தியாகங்களை இந்தியா அங்கீகரித்து கௌரவிக்கிறது என்றும், மருத்துவர்கள் தினம் என்பது நமது மருத்துவர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கௌரவிக்கும் ஒரு சிறப்பு தினம் என்றும் அவர் கூறினார். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் ல்வாழ்வை உறுதி செய்வதில் மருத்துவர்களின் முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமின்றி, நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பிலும்  உலகளாவிய முன்னணி நடாக இந்தியா மாறியுள்ளது என்றார்.

சுகாதாரப் பராமரிப்பு என்பது அலோபதி மருத்துவத்தோடு நின்றுவிடக் கூடாது என்றும் ஆயுஷ் மற்றும் பிற முறைளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவர்களுக்கு சிறந்த பணி நிலைமை, தொடர்ச்சியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...