நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் கூறியுள்ளா

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய   அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தித் துறையின் 100 நாள் செயல்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று  (25.06.2024) புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்ததுடன் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், அணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

கதிரியக்க மருந்துகள் மற்றும் அணுசக்தி மருத்துவம், ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கதிரியக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்கு வழிவகுக்கும் என்றும்   டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறை செயலாளருமான டாக்டர் அஜித்குமார் மொகந்தி மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...