இளஞர்களின் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா

25 கோடி இளைஞர்கள் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இளையோர் நல்வாழ்வில் முதலீட்டுக்கான பொருளாதாரம்” என்பது குறித்த அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டுப் பேசிய அவர், உலகிலேயே இந்தியா அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருப்பதாகவும், இவர்கள் நமது எதிர்காலத்தின் முதுகெலும்பு என்றும் குறிப்பிட்டார்.

இவர்களின் சுகாதாரம், கல்வி, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது, நமது தேசிய, சர்வதேச வளர்ச்சி  இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். ஆண்களாயினும், பெண்களாயினும், ஊரகப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும், திருமணம் ஆனவராக  இருந்தாலும், திருமணம் ஆகாதவராக இருந்தாலும், பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே இருப்பவராக இருந்தாலும்  இளைஞர்கள் மீது சிறப்பு  கவனம் செலுத்தப்படுவதாக திரு அபூர்வ சந்திரா கூறினார். இளம் வயது பெண்களிடம் மாதவிடாய் கால தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் நலனில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 4.6 முதல்  71.4 டாலர் வரை பயன் கிடைக்கும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும்  41 மில்லியன் இளைஞர்கள் பயனடையும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி  நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.