இளஞர்களின் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா

25 கோடி இளைஞர்கள் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இளையோர் நல்வாழ்வில் முதலீட்டுக்கான பொருளாதாரம்” என்பது குறித்த அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டுப் பேசிய அவர், உலகிலேயே இந்தியா அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருப்பதாகவும், இவர்கள் நமது எதிர்காலத்தின் முதுகெலும்பு என்றும் குறிப்பிட்டார்.

இவர்களின் சுகாதாரம், கல்வி, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது, நமது தேசிய, சர்வதேச வளர்ச்சி  இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். ஆண்களாயினும், பெண்களாயினும், ஊரகப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும், திருமணம் ஆனவராக  இருந்தாலும், திருமணம் ஆகாதவராக இருந்தாலும், பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே இருப்பவராக இருந்தாலும்  இளைஞர்கள் மீது சிறப்பு  கவனம் செலுத்தப்படுவதாக திரு அபூர்வ சந்திரா கூறினார். இளம் வயது பெண்களிடம் மாதவிடாய் கால தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் நலனில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 4.6 முதல்  71.4 டாலர் வரை பயன் கிடைக்கும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும்  41 மில்லியன் இளைஞர்கள் பயனடையும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி  நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...