இளஞர்களின் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா

25 கோடி இளைஞர்கள் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இளையோர் நல்வாழ்வில் முதலீட்டுக்கான பொருளாதாரம்” என்பது குறித்த அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டுப் பேசிய அவர், உலகிலேயே இந்தியா அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருப்பதாகவும், இவர்கள் நமது எதிர்காலத்தின் முதுகெலும்பு என்றும் குறிப்பிட்டார்.

இவர்களின் சுகாதாரம், கல்வி, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது, நமது தேசிய, சர்வதேச வளர்ச்சி  இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். ஆண்களாயினும், பெண்களாயினும், ஊரகப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும், திருமணம் ஆனவராக  இருந்தாலும், திருமணம் ஆகாதவராக இருந்தாலும், பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே இருப்பவராக இருந்தாலும்  இளைஞர்கள் மீது சிறப்பு  கவனம் செலுத்தப்படுவதாக திரு அபூர்வ சந்திரா கூறினார். இளம் வயது பெண்களிடம் மாதவிடாய் கால தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் நலனில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 4.6 முதல்  71.4 டாலர் வரை பயன் கிடைக்கும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும்  41 மில்லியன் இளைஞர்கள் பயனடையும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி  நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...