கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.சி.ஏ., எனப்படும், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை கூட்டுறவு என்பது அடிப்படை கலாசாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. கூட்டுறவு தொடர்பான ஒட்டுமொத்த சூழல், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தனியாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டில், இரண்டு லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித்துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்தை சுழற்சி பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். இத்துறையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை கிராமங்களில் அமைக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதன் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நம் அண்டை நாடான பூடான் பிரதமர் தாஷோ டிஷெரிங் டோப்கே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியின் துணை பிரதமர் மனோவா காமிகாமிகா, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...