கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.சி.ஏ., எனப்படும், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை கூட்டுறவு என்பது அடிப்படை கலாசாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. கூட்டுறவு தொடர்பான ஒட்டுமொத்த சூழல், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தனியாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டில், இரண்டு லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித்துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்தை சுழற்சி பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். இத்துறையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை கிராமங்களில் அமைக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதன் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நம் அண்டை நாடான பூடான் பிரதமர் தாஷோ டிஷெரிங் டோப்கே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியின் துணை பிரதமர் மனோவா காமிகாமிகா, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...