முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பெயரை, திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு சூட்ட வேண்டும் என திருவாரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.இதில் எதிர்பார்ப்பையும் மீறி சுமார் 10000 பேர் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருணாநிதி பெயர் வைத்தால், அரசை இயங்க விட மாட்டோம் என கூறியிருந்தார்.
மக்களின் கடும் எதிர்ப்பும், பாஜக.,வின் தீர்க்கமான போராட்டமும் திமுக.,வை பின்வாங்க வைத்துள்ளது. ஆனால் மீசையில் மண் ஒட்டாத கதையாக அமைச்சர் நேரு கூறியதாவது: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதை கூட அறிந்து கொள்ளாமல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் என அரசியல் செய்கிறார்.என்று கூறியுள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |