100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நேற்று (15.6.2024) இணை அமைச்சர்கள்   ராம்தாஸ் அத்வாலே மற்றும்   பி.எல் வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் . அடுத்த 100 நாட்களுக்கான துறையின் முக்கிய முயற்சிகளில் உத்திகளை அவர் வகுத்தார்.

இந்தக் கூட்டத்தில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகத்தின் (அலிம்கோ) நவீனமயமாக்கல் முயற்சிகளைத் தொடர்ந்து, துறையின் முன்முயற்சிகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை  செயலாளர்  ராஜேஷ் அகர்வால் விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர், இந்திய மறுவாழ்வு கவுன்சில், தேசிய நிறுவனங்கள், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் துறையின் பரவல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.  சாதனைகளை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான துறையின் உறுதிப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டம் வெளிப்படுத்தியது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதில் இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் வலியுறுத்தினார். “சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசின்  கவனம் உள்ளது. அலிம்கோவின் நவீனமயமாக்கல் மற்றும் நமது  பல்வேறு அமைப்புகளின் சாதனைகள் இந்த இலக்கை நோக்கிய நமது  அர்ப்பணிப்புக்கு சான்றாகும்’’ என்று அவர் கூறினார்.

இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல்.வர்மா ஆகியோர் இந்த உணர்வுகளை ஆமோதித்து, இந்த முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தனர். செயலாளர்  ராஜேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள், உரிய நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் விரிவான திட்டங்களை வழங்கினர்.

எதிர்கால முன்னேற்றங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து, கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடைய அடுத்த 100 நாட்களில் அயராது உழைக்கும் அரசின் ஒருமித்த உறுதிப்பாட்டுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...