தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என மத்திய அமைச்சர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சமூக விரோதிகள் புகுந்து, பள்ளி சுவற்றிலும், சமையல் அறையின் பூட்டிலும், மனிதக் கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கத் தகுதியற்றவர்கள்.
பள்ளிகளிலும், பொது இடங்களிலும் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையிலான கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது. எருமப்பட்டி ஊராட்சி பள்ளியில் நடந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |