ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும் – வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு கூறினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், ‘ இஸ்கான் ‘ அமைப்பை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் பிரச்னையை வங்கதேச அரசிடம் தொடர்ச்சியாகவும், வலிமையாகவும் எடுத்துக்கூறி வருகிறோம். அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. பயங்கரவாதத்திற்கு ஆதரவான பேச்சுக்கள், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பார்த்து கவலைப்படுகிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மீடியாக்களில் வருபவை என ஒதுக்கிவிட முடியாது.

இஸ்கான் அமைப்பானது, உலகளவில் சமூக சேவையில் நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். சிறுபான்மையினரை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் கருத்து துரதிர்ஷ்டம்

மஹா., தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல், பிரதமர் மோடியும் மறதியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார்.

இது குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு வகைகளில் உறவை பகிர்ந்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக பரஸ்பர மரியாதை மற்றும் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டது. ராகுலின் இதுபோன்ற கருத்து துரதிர்ஷ்டவசமானது. அவரின் கருத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதானி விவகாரம்

அதானி விவகாரம் குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: அமெரிக்க நீதித்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடையிான சட்ட விவகாரமாக நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க அரசு எந்த தகவலையும் பகிரவில்லை. கோரிக்கையையும் அமெரிக்க அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...