ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும் – வங்கதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு கூறினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், ‘ இஸ்கான் ‘ அமைப்பை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் பிரச்னையை வங்கதேச அரசிடம் தொடர்ச்சியாகவும், வலிமையாகவும் எடுத்துக்கூறி வருகிறோம். அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. பயங்கரவாதத்திற்கு ஆதரவான பேச்சுக்கள், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பார்த்து கவலைப்படுகிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மீடியாக்களில் வருபவை என ஒதுக்கிவிட முடியாது.

இஸ்கான் அமைப்பானது, உலகளவில் சமூக சேவையில் நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். சிறுபான்மையினரை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் கருத்து துரதிர்ஷ்டம்

மஹா., தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல், பிரதமர் மோடியும் மறதியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார்.

இது குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு வகைகளில் உறவை பகிர்ந்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக பரஸ்பர மரியாதை மற்றும் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டது. ராகுலின் இதுபோன்ற கருத்து துரதிர்ஷ்டவசமானது. அவரின் கருத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதானி விவகாரம்

அதானி விவகாரம் குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: அமெரிக்க நீதித்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடையிான சட்ட விவகாரமாக நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க அரசு எந்த தகவலையும் பகிரவில்லை. கோரிக்கையையும் அமெரிக்க அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...