பாப்ஸ் அமைப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

‘பாப்ஸ்’ எனப்படும், ‘போச்சசன்வாசி ஸ்ரீ அக் ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா’ என்ற அமைப்பு நம் நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பிரமாண்டமான ஹிந்து கோவில்கள் உருவாக காரணமாக அமைந்துள்ளது.

இந்த அமைப்பின் தன்னார்வலர்கள், பேரிடர் சமயங்களில் பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். பாப்ஸ் அமைப்பின், தன்னார்வலர்கள் கூட்டம் குஜராத்தின் ஆமதாபாதில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் கூறியதாவது:

பாப்ஸ் அமைப்பின் பணி, பகவான் சுவாமிநாராயணனின் போதனைகள் வாயிலாக உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது.

இந்த அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், எந்த நெருக்கடியான சூழலிலும் பெருந்துயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணை உள்ளத்துடன் சேவை செய்து வருகின்றனர். இவர்களின் இந்த அரிய பணியால், நம் நாடு வலிமை பெறுகிறது. இவர்களின் சிறப்பான செயலால், உலகளவில் நம் நாட்டின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

பாப்ஸ் அமைப்பின் தன்னார்வலர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம் ஒன்றுதான். எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இயற்கை விவசாயம், வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பரப்புதல், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுங்கள். வரும் 2047க்குள் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...